Skip to main content

சிறை கைதிகள் ரெண்டு தடவை குளிக்கணுமாம்...!

Published on 17/03/2020 | Edited on 17/03/2020

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல இந்தியாவிலும் பரவத் தொடங்கி இருக்கிறது. இதுவரை நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மஹாராஷ்டிராவில் கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். அவர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரையும் சேர்த்து கரோனாவுக்கு இதுவரை இந்தியாவில் மூன்று பேர் பலியாகி உள்ளனர். 

 

Corona virus issue

 



இது ஒருபுறம் இருக்க, கரோனா வைரஸ் தொற்றிலிருந்து காக்கும் நடவடிக்கையாக கூட்டமாக மக்களை கூட வேண்டாம் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதற்காக கல்வி நிலையங்களுக்கு மார்ச் 31 வரை விடுமுறை விடப்பட்டுள்ளதோடு, கூட்டம் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், திரையரங்குகளையும் மூடிவிட உத்தரவிடப்பட்டு உள்ளது.

இது ஒருபுறம் இருக்க தமிழக சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் குளித்து, தன் சுத்தத்தைப் பராமரிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழக சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''தமிழகத்தில் மத்திய சிறைச்சாலைகள் உள்பட 138 சிறைச்சாலைகள் உள்ளன. 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில், துளசி, வேப்பிலை கலந்து தயாரிக்கப்பட்ட சோப்புகள் பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவ அறிவுறுத்தி இருக்கிறோம். அதற்கான வசதிகளை எல்லா சிறைச்சாலைகளிலும் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் குளிக்கவும், மருத்துவ பரிசோதனைக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கைதிகள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்வதை தவிர்க்கும்படி சொல்லி இருக்கிறோம். சிறைக்காவலர்கள் முகக்கவசம் அணிந்து பணியாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,'' என்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பிரபல தயாரிப்பாளருக்கு 6 மாத சிறைத் தண்டனை!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
The famous producer was sentenced to 6 months in prison

தங்கமீன்கள், தரமணி, குற்றம் கடிதல் போன்ற படங்களை ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் மூலம் தயாரித்தவர் ஜெ.சதீஷ்குமார். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு, சினிமா பைனான்சியரான சுகன் போத்ராவிடம் சுமார் ரூ.2.6 கோடி கடன் வாங்கியிருந்தார். 

தான் பெற்ற கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்காக தயாரிப்பாளர் ஜெ. சதீஷ்குமார், பைனான்சியர் சுகன் போத்ராவிடம் காசோலையை வழங்கியுள்ளார். இதனைப் பெற்றுக் கொண்ட சுகன் போத்ரா, வங்கிக் கணக்கில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சுகன் போத்ரா, சென்னை ஜார்ஜ் டவுன் 4வது விரைவு நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமார் மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். 

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி ஏ.கே.என். சந்திரபிரபா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமாருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், அந்தக் கடன் தொகையை வட்டியுடன் சினிமா பைனான்சியர் சுகன் போத்ராவிடம் திரும்பிச் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். 

Next Story

சிறுவனுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை;  ஆசிரியருக்கு 56 ஆண்டுகள் சிறை!

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
56 years in prison for the teacher for incident happened boy

கேரளா மாநிலம், திருவனந்தபுரம் அருகே போத்தன்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஜப்பார்(60). இவர் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மேலும், இவர் தனது வீட்டில் வைத்து மாணவர்களுக்கு அரபி பாடம் கற்றுக்கொடுத்து வந்துள்ளார். 

இவரிடம் ஏராளமான மாணவர்கள் அரபி பாடம் படித்து வருகின்றனர். அதில் 11 வயது கொண்ட மாணவர் ஒருவர் படித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அப்துல் ஜப்பார் அந்த மாணவரை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். மேலும், இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று அந்த மாணவரை அப்துல் ஜப்பார் மிரட்டி வந்துள்ளார். 

ஒரு கட்டத்தில் மனமுடைந்த அந்த மாணவர், தனக்கு நேர்ந்த கொடுமையைத் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், இந்தச் சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். அவர்கள் கொடுத்தப் புகாரின் பேரில் ஓய்வுபெற்ற ஆசிரியரான அப்துல் ஜப்பார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு போத்தன்கோடு விரைவு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் நீதிமன்ற நீதிபதி நேற்று தீர்ப்பளித்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘பாலியல் வன்கொடுமை செய்து வந்தவருக்கு எந்தக் கருணையும் காட்டவேண்டிய தேவை இல்லை’ என்று கூறி அப்துல் ஜப்பாருக்கு 56 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.78 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.