Skip to main content

கரோனா ஊரடங்கால் கூத்தாண்டவர் கோயில் திருவிழா ரத்து... தூய்மைப்பணியாளர்களை கௌரவித்த திருநங்கைகள்!

Published on 28/04/2021 | Edited on 29/04/2021

 

Corona Uratangal Koottandavar Temple Festival Canceled .

 

கரோனா ஊரடங்கால் கடந்த இரு வருடங்களாக திருநங்கைகள் பங்கேற்கும் கூவாகம் கூத்தாண்வர் கோயில் திருவிழா ரத்து செய்யப்பட நிலையில், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் திருநங்கைகள் இணைந்து கூத்தாண்டவரை வழிபட்டு கூத்தாண்டவர் கரோனா கிருமிகளை அழித்து உலக மக்களை காக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டதுடன், தங்கள் உயிரை துச்சமென நினைத்து மக்களை காக்க ஊரை சுத்தமாக வைத்திருக்கும் தூய்மைப் பணியாளர்களை கௌரவித்து ஆசி வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

 

பட்டுக்கோட்டையில் தாங்கள் தங்கியிருக்கும் வீட்டில் கூத்தாண்டவருக்கு வழிபாடு நடத்திய திருநங்கைகள் தொடர்ந்து தாரை தப்பட்டை முழங்க மாலைகள் அணிந்து கரகம் தூக்கி நகரில் சில வீதிகளை சுற்ற வந்து பொதுமக்களுக்கு ஆசி வழங்கினார்கள். தொடர்ந்து கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடப்பது போல சில திருநங்கைகள் தாலி அறுத்து வெள்ளைப்புடவை அணிந்து கதறி அழுதனர். துக்க வீடுகளில் நடப்பது போல ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அழுதனர். இதுபோன்ற நிகழ்வை முதல்முறையாகப் பார்த்த பட்டுக்கோட்டை நகர மக்கள் ஆச்சர்யமாக பார்த்தனர். 

 

Corona Uratangal Koottandavar Temple Festival Canceled .

 

இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை நகரை சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, பழம், பணம் வைத்து கொடுத்து தூய்மைப் பணியாளர்களை கௌரவப்படுத்தி அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று ஆசியும் வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவமும் நடந்தது. இந்த நிகழ்வுகளுப்பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய திருநங்கைகள் கூறும்போது, ''கரோனா தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இரண்டு வருடங்களாக கூவாகம் செல்ல தடைவிதக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து கூத்தாண்டவரை தரிசிக்க திருநங்கைகள் வரமுடியவில்லை. ஆனால் அவர்கள் வசிக்கும் இடங்களில் கூத்தாண்டவரை வழிபடுகிறார்கள். சக்திமிக்க கூத்தாண்டவர் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கரோனாவை அழித்து உலக மக்களை காப்பாற்றுவார். அதற்காக நாங்கள் கூத்தாண்டவரிடம் கேட்டுக்கொண்டோம்'' என்றனர்.

 

Corona Uratangal Koottandavar Temple Festival Canceled .

 

திருநங்கைகளின் கௌரவத்தை ஏற்றுக் கொண்ட தூய்மைப்பணியாளர்கள் கூறும்போது, ''நாட்டு மக்கள் நோயால் அவதிப்படக்கூடாது என்பதற்காக நாங்கள் தூய்மைப்பணி செய்கிறோம். எங்களை எவ்வளவோ பேர் பாராட்டுகிறார்கள். ஆனால் இப்போது திருநங்கைகள் எங்களை கௌரவப்படுத்தியது வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் என்றனர் நெகிழ்ச்சியாக'' திருநங்கைகளின் இந்த செயலை பட்டுக்கோட்டை நகர மக்கள் பாராட்டினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருநங்கையால் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள்! அம்மன் கோயிலுக்கு தூக்கிச் சென்று வழிபட்ட பெண்கள்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது கல்லாலங்குடி கிராமம். இங்குள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரை மாதத்தில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் நடக்கும். இதில் கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி, சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திருவிழாக்களை கொண்டாடுவார்கள். மேலும் சுற்றியுள்ள பல கிராமமக்களும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி பெண்கள் இணைந்து சித்ரா பவுர்ணமி குழ அமைத்து முளைப்பாரி எடுக்கத் தொடங்கினர். விநாயகர் கோயிலில் இருந்து குறைவானவர்களே முளைப்பாரி தூக்கி வந்து வழிபட்டனர். இந்த நிலையில் தான் கம்மங்காடு உதயா உள்ளிட்ட சில திருநங்கைகள் வந்து கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு கிராம மக்கள் எல்லோரும் முளைப்பாரி தூக்க வேண்டும் என்று கூறியதுடன் சித்ரா பவுர்ணமி குழு பெண்களுடன் இணைந்து கடந்த ஆண்டு ஒரே மாதிரியான பாத்திரங்களில் விதைகளை தூவி 9 நாட்கள் விரதமிருந்து நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து பெண்களிடம் கொடுத்து ஊர்வலமாக தூக்கிச் சென்று அம்மனை வழிபட்டனர்.

அதே போல இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்த திருநங்கை உதயா பவுர்ணமி விழாக்குழு மூலம் முளைப்பாரி தூக்குவோரின் பெயர்களை முன்பதிவு செய்து, கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு சமுதாயக்கூடத்தில் வைத்து சுமார் 400 முளைப்பாரிகளை ஒரே மாதிரியான அலுமினிய பாத்திரத்தில் ஒரே மாதிரியான விதைகளை தூவி, விரதமிருந்து விதை தூவிய பாத்திரத்திற்கு காலை, மாலை என இரு நேரமும் தண்ணீர் தெளித்து, பவுர்ணமி குழுவினர் உதவியுடன் வளர்த்து வந்தார். அனைத்து பாத்திரங்களிலும் ஒரே மாதிரியாக பயிர்கள் வளர்ந்திருந்தது.

செவ்வாய் கிழமை முளைப்பாரித் திருவிழாவிற்கு முன்பதிவு செய்த பெண்கள் ஒரே மாதிரியான சேலையில் வந்தனர். இந்த அழகைக்கான ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். வளர்ந்திருந்த முளைப்பாரிகளை அலங்கரித்து வைத்து ஒரு குடத்தில் அம்மன் சிலை வைத்து பூ அலங்காரம் செய்து வைத்திருந்த நிலையில் கோயில் பூசாரியிடம் அலங்காரத்தில் இருந்த அம்பாள் குடத்தையும் முளைப்பாரிகளை பெண்கள் தலையிலும் தூக்கி வைத்த உதயா அருளாட்டத்துடன் பூசணிக்காய் உடைக்க முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழக்கத்துடன் புறப்பட்ட ஊர்வலம் சுமார் 5 கி மீ தூரத்திற்கு பல பகுதிகளுக்கும் சென்று மீண்டும் முத்துமாரியம்மன் கோயில் வளாகம் வந்தடைந்தது.

women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

அனைத்து முளைப்பாரிகளும் கோயில் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன் கிழமை மாலை 4 மணிக்கு மீண்டும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து முளைப்பாரியை ஊர்வலமாக தூக்கிச் சென்று அருகில் உள்ள குளத்தில் விடுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் முளைப்பாரி திருவிழா என்றால் அவரவர் வீடுகளில் நமண்சட்டிகளில் அல்லது வெவ்வேறு பாத்திரங்களில் மண் நிரப்பி நவதானிய விதை தூவி பயிர் வளர்த்து திருவிழா நாளில் தூக்கி வந்து ஊரின் ஓரிடத்தி்ல் ஒன்று கூடி மண்ணடித்திடலைச் சுற்றி வந்து குளங்களில் விட்டுச் செல்வது வழக்கமாக இருக்கும்.

ஆனால் கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு திருநங்கை விரதமிருந்து ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து கிராம மக்களை அழைத்து தூக்கச் செய்து அம்மனை வழிபடச் செய்கிறார் என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முளைப்பாரியை சிறப்பாக செய்திருந்த திருநங்கை உதயாவிற்கு விழாக்குழு சார்பில் மரியாதை செய்தனர்.

Next Story

“திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
People should not ignore Transgender says Chief Minister MK Stalin

இந்தியாவில் திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவராக கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் அங்கீகரித்து உத்தரவிட்டிருந்தது. இதனையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 தேசிய திருநங்கையர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை திருநங்கைகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தேசிய திருநங்கையர் தினத்தை முன்னிட்டு, திருச்செங்கோடு ஒன்றியக் குழு உறுப்பினர் முனைவர் ரியா தலைமையில் இன்று என்னை வந்து சந்தித்த திருநங்கையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

இந்தியாவிலேயே முதன்முறையாகத் திருநங்கைகளுக்காகத் தனி நலவாரியம், அடையாள அட்டைகள், பேருந்துகளில் இலவசப் பயணம், மேற்கொள்ள விடியல் பயணம் திட்டம், உயர்கல்வி பயிலக் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் அரசே ஏற்பு எனப் புரட்சிகரமான பல திட்டங்களைச் செய்துள்ளது திமுக. தங்களது ஆற்றலால் சமூகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது. நம்மில் ஒருவராகக் கருத வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.