Skip to main content

கரோனா தடுப்பு பணி.. திருச்சியில் அமைச்சர்களுடன் அதிகாரிகள் ஆலோசனை..! 

Published on 14/05/2021 | Edited on 14/05/2021

 

Corona prevention work .. Officials consult with ministers in Trichy ..!

 

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (14.05.2021) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அம்மாவட்டத்தின் 7 சட்டமன்ற உறுப்பினர்களும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்று, அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார்கள்.

 

இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் கரோனாவின் பாதிப்பு எப்படி உள்ளது என்றும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் அனைவரும் அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தனர்.

 

சுமார் ஒருமணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, “சென்னையில் எப்படி ‘வார் ரூம்’ அமைக்கப்பட்டுள்ளதோ அதேபோல திருச்சியிலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்கு வார் ரூம் அமைக்கப்பட உள்ளது. அதில் டி.ஆர்.ஓ. மற்றும் அவருக்கு கீழ் இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் அவர்களைத் தொடர்புகொண்டு எந்த உதவிகளையும் பெறலாம்.

 

ரெம்டெசிவர் மருந்தானது, மத்திய அரசிடமிருந்து பெறுவது மிகக் குறைவாக இருப்பதால் அதை அதிகப்படுத்திப் பெற மத்திய அமைச்சரிடம் தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். ஒருநாளைக்கு 300 பேருக்கு கொடுக்கப்படும் இடத்தில், 500க்கும் அதிகமானோர் கூட்டமாக சேர்ந்து வரிசையில் நின்று காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அதனை சரி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

 

முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி நாங்கள் முதலில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளோம். தொகுதிகளுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் முழுமையாக நிச்சயம் நிறைவேற்றுவோம்” என்று தெரிவித்தார்.

 

தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சரிடம், தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், “பல பெற்றோர்களிடம் இருந்து நானும் பல புகார்களைப் பெற்றுவருகிறேன். குறிப்பாக ஓடாத பேருந்துக்கு கட்டணம் வசூலிப்பதாகவும் பள்ளிக்கு வராத நிலையில் பள்ளி சீருடைக்கான கட்டணம் வசூலிப்பதும் என்று தொடர்ந்து வசூல்செய்து வருவதாக எனக்கு வந்த புகாரின் அடிப்படையில் விரைவில் அதுகுறித்து தனியார் பள்ளிகளோடு ஆலோசனை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.