Skip to main content

கரோனா எதிரொலி...  பழனிக்கு வரும் பக்தர்களுக்கு  மாஸ்க் வழங்க முடிவு

Published on 17/03/2020 | Edited on 17/03/2020

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழக அரசு பள்ளி கல்லூரிகளுக்கு வருகிற  31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து இருக்கிறது. அதோடு சுற்றுலாத்தலங்கள், கோயில்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும் சுற்றுலாதலங்களுக்கும், கோயில்களுக்கும் போவதையும் பெரும்பாலும் தவித்து வருகிறார்கள்.

 

 Corona echo .. For Palani pilgrims Decide to provide the mask


ஆனால் தமிழகத்திலேயே பிரசித்தி பெற்ற பழனி முருகனை தரிசிக்க கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட வெளிமாநில பக்தர்களும், தமிழகத்தில் உள்ள பலமாவட்டங்களிலிருந்தும் இருக்கக்கூடிய பக்தர்களும் தினசரி முருகனை தரிசிக்க வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படி வரக்கூடிய பக்தர்களுக்காக படிப்பாதை விஞ்சு ரோப், மலை சன்னிதானத்தில் ஒரு டாக்டர் தலைமையில் 4 நர்ஸ்கள் கொண்ட மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமுகாம்களில் முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் பரிசோதனை செய்துவிட்டுதான் முருகனை தரிசிக்க அனுப்பிவைத்து வருகிறார்கள். அதோடு பக்தர்கள் யாருக்கேனும் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டால் உடனே அந்தந்தப் பகுதியில் உள்ள மருத்துவ முகாம்களில் பரிசோதனை செய்துகொள்ளலாம். அந்த அளவுக்கு கரோனா வைரஸிலிருந்து பக்தர்களை காப்பாற்றுவதற்காக சப்-கலெக்டர் உமா மற்றும் கோவில் நிர்வாக அதிகாரியான ஐ.ஏ.எஸ் சந்திரபானு ரெட்டி ஆகியோர் இந்த மருத்துவக் குழுக்களை அமைத்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அதுபோல் ரயில்வே நிலையம், பஸ்ஸ்டாண்டு உள்பட நகரங்களின் முக்கிய பகுதிகளிலும் மருத்துவக் குழுக்களை அமைத்துள்ளனர். 

 

 Corona echo .. For Palani pilgrims Decide to provide the mask


இருந்தாலும் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் குறைந்த அளவிலே வருவதால் அடிவாரம் முதல் கோயில் வரை வெறிச்சோடி கிடக்கிறது.

இது சம்பந்தமாக பழனி தண்டபாணி கோவில் செயல் அதிகாரியான சந்திரபானு ரெட்டி கூறும்போது,

 

 Corona echo .. For Palani pilgrims Decide to provide the mask

 

கரோனாவிலிருந்து பொதுமக்களையும், பக்தர்களையும் காப்பாற்றுவதற்காக அங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல் கோயிலில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் மாஸ்க் கட்டிதான் பணிபுரிந்து வருகிறார்கள். அதுபோல் தினசரி மலைக்கோயிலில் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கி வருவதால் அன்னதானம்  சப்ளை செய்யும் ஊழியர்கள் கூட மாஸ்க் கட்டிதான் பணி செய்து வருகிறார்கள்.  இருந்தாலும் முருகனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு திருக்கோவில் சார்பாக மாஸ்க் வழங்கவும் முடிவு செய்துள்ளேன். இன்னும் ஒரு சில நாட்களில் முருகனை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் மாஸ்க் வழங்கப்படும் என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.