Skip to main content

நகராட்சி பொறியாளரை தாக்கிய ஒப்பந்ததாரர் கைது!

Published on 01/01/2022 | Edited on 01/01/2022

 

 

Contractor arrested for assaulting municipal engineer

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சியில் பொறியாளராகப் பணியாற்றுபவர் ஜெயபிரகாஷ் நாராயணன் (வயது 46), விழுப்புரம் மாவட்டம், என்.ஜி.ஓ நகரைச் சேர்ந்தவரான இவர் கடலூரில் பணியாற்றி, கடந்த மூன்று  மாதங்களுக்கு முன்பு விருத்தாசலம் நகராட்சியில் பொறியாளராக பொறுப்பேற்றார். 

 

அதே நகராட்சியில் ஒப்பந்ததாரராக மதியழகன் (வயது 49) என்பவர் இருந்து வந்தார். இந்நிலையில் துர்கா நகர் பகுதியில் நடைபெற்ற சிமெண்ட் சாலை போடும் பணி காரணமாக 20 லட்ச ரூபாய் மதியழகனுக்கு நிலுவை பில் பாக்கி இருந்து வந்தது. இதற்கான பில்லை முடித்து தருமாறு மதியழகன் ஜெயபிரகாஷ் நாராயணனிடம் கேட்டு வந்தார். 

 

அப்போது 'நகராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் போடவே வருவாய் இல்லை. எனவே வருவாய் சீரான பின் பில் பாக்கி தரப்படும்' என ஜெயப்பிரகாஷ் நாராயணன் கூறினார். மேலும் பணியின் தரம் குறித்து ஆய்வு செய்த பின்பு தான் பில் தொகை வழங்கப்படும் என ஜெயபிரகாஷ் நாராயணன் கூறியுள்ளதாக தெரிகிறது. 

 

இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்ததாரர் மதியழகன் மற்றும் அரசியல்வாதிகள் சில பேருடன் சென்று  ஜெயப்பிரகாஷ் நாராயணனை அசிங்கமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.  இது குறித்து பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் மற்றும் போலீசார் ஒப்பந்ததாரர் மதியழகன் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். 

 

அதேபோல் ஒப்பந்ததாரர் மதியழகன் கொடுத்த ஒரு புகாரின் பேரில், பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.