Skip to main content

தொடரும் ரயில் கொள்ளை; பயணிகள் அச்சம்!

Published on 07/05/2019 | Edited on 07/05/2019


சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் சேலம் - ஈரோடு வழியாக செல்லும் ரயில்கள், மாவேலிபாளையம் அருகே செல்லும்போது, 20 கிமீ வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட தூரம் வரை ரயில்கள் மெதுவாகச் செல்வதை கண்காணித்து வந்த கொள்ளையர்கள், ரயில் பயணிகளிடம் நகைகள், கைப்பைகளை கொள்ளை அடித்துக்கொண்டு ரயிலில் இருந்து கீழே குதித்து தப்பி விடுகின்றனர்.

 

 Continuing train robbery; Passengers fear!

 


கடந்த மே 3ம் தேதி, ஓடும் ரயிலில் பயணிகளிடம் 22 பவுன் நகைகளைக் கொள்ளை அடித்த மர்ம கும்பல், மறுநாளும் (மே 4) அதேபோல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. அப்போது எட்டு பவுன் நகைகளைக் கொள்ளை அடித்த மர்ம நபர்கள், ரயிலில் பாதுகாப்புக்குச் சென்றிருந்த காவலர்களையும் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். தொடர்ச்சியாக இரண்டு நாள்களில் முப்பது பவுன் நகைகளை கொள்ளை அடித்ததாக காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இரு சம்பவங்களிலும் ஒரே கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 


வடமாநிலங்களில் மட்டுமே நடந்து வந்த இதுபோன்ற ரயில் கொள்ளை சம்பவங்கள், இப்போது தமிழக ரயில்களிலும் நடந்து வருகின்றன. இதனால் ரயில் பயணிகளிடையே அச்சம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, கொள்ளை கும்பலை பிடிக்க பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. சேலம், ஈரோடு ரயில்களில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நூறு அடிக்கு இரு காவலர்கள் என்ற அடிப்படையில் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

 

 Continuing train robbery; Passengers fear!

 

கொள்ளையை அரங்கேற்றிவிட்டு தப்பியோடும் மாவேலிபாளையம் பகுதியில் மட்டும் 300க்கும் அதிகமான காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்குரிய பழைய வடமாநில கொள்ளையர்கள், தமிழகத்தைச் சேர்ந்த கொள்ளை கும்பல் ஆகியோரின் விரல் ரேகைகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். 

 


இந்நிலையில், ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் டிஐஜி பாலகிருஷ்ணன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மே 5ம் தேதி, ரயிலில் கொள்ளை நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்தனர். அதன்பிறகு திங்கள்கிழமை (மே 6), அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை நடத்தினார். கொள்ளை கும்பலை விரைந்து பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

 


இது தொடர்பாக ரயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன் கூறுகையில், ''கொள்ளை கும்பலை பிடிக்க அனைத்து ரயில்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கொள்ளை கும்பலை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நடவடிக்கையில் ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே காவல்துறை, உள்ளூர் காவல்துறை ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகிறோம். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த ரயில்வே துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது,'' என்றார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.