Skip to main content

தொடர் கனமழை! நேரில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்!

Published on 10/11/2021 | Edited on 10/11/2021

 

Continued heavy rain! Collector who inspected in person

 

“திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கனமழையின் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 9 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர் பாதிப்புக்குள்ளாகியுள்ளது” என  வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்திற்குப் பின்பு ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

 

திருவாரூர் கமலாலயகுளம், புதிய பேருந்து நிலையம், சமீபத்தில் உடைப்பெடுத்த வெட்டாறு படுகை உள்ளிட்ட பல பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கிர்லோஷ் குமார் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கலைவாணன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

 

அதன் பின் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (09.11.2021) மாலை, வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளரும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான கிர்லோஷ் குமார் தலைமையில் ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

இதில், செய்தியாளர்களைச் சந்தித்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், “திருவாரூர் மாவட்டத்தில் 212 பகுதிகள் மழையினால் பாதிப்படையக்கூடிய பகுதிகளாக கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரை பெய்த மழையில் 168 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. ஒரு வீடு முழுவதும் இடிந்து விழுந்துள்ளது. இதற்குரிய நிவாரணப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

 

மேலும், தொடர் மழையின் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காயமடைந்துள்ளார். அதேபோல 11 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. கால்நடைகள் அனைத்தும் மழை பாதிப்பு காரணமாகத்தான் உயிரிழந்ததா என பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் தெரியவரும். தொடர்  மழையினால் சம்பா நெற்பயிர் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை மற்றும் வேளாண் துறை இணைந்து கணக்கெடுக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. பேரிடர் காலத்தில் பொதுமக்களைப் பாதுகாப்பாக தங்கவைப்பதற்கு ஏதுவாக 249 பாதுகாப்பு மையங்கள் தேர்வு செய்து தயார் நிலையில் உள்ளன" என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.