Skip to main content

ரயிலை கவிழ்க்க சதியா? திக்கணங்கோட்டில் பரபரப்பு!

Published on 20/03/2022 | Edited on 20/03/2022

 

Conspiracy to overturn the train? Excitement on the Thikkanangkodu

 

கன்னியாகுமரியில் ரயில் தண்டவாளத்தில் கருங்கல் பாறை வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை -குருவாயூர் விரைவு ரயில் கன்னியாகுமரி அருகே சென்று கொண்டிருந்தபோது ரயிலில் அதிர்வு ஏற்பட்டதாக ரயிலில் ரயில் ஓட்டுநர் புகார் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் ரயில்வே ஊழியர்கள் ஆய்வு செய்தபோது தண்டவாளத்தில் கருங்கல் பாறை இருந்தது தெரியவந்தது. இதனால் ரயிலை கவிழ்க்க சதி நடைபெற்றதா என்ற ஒரு சந்தேகம் ரயில்வே ஊழியர்களுக்கு ஏற்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இரணியல் மற்றும் குழித்துறை வழித்தடங்களுக்கிடையே சென்னையிலிருந்து குருவாயூர் செல்லக்கூடிய குருவாயூர் விரைவு ரயில் கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு அருகே சென்று கொண்டிருந்த பொழுது திடீரென ரயில் அதிர்வை உணர்ந்து. இதனை உணர்ந்த ரயில் ஓட்டுநர் ரயில் மீது எது மோதியதாக அருகில் இருந்த ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் அந்த பகுதியில் ஆய்வு நடத்தினர். அதில் கருங்கல் பாறை ஒன்று துண்டு துண்டாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரயில்வே தண்டவாளத்தில் அந்த பாறை தற்செயலாக கிடைந்ததா அல்லது ரயிலை கவிழ்க்கும் நோக்கத்தோடு யாரேனும் இதனை செய்துள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதேபோல் சென்னையிலிருந்து பாலக்காடு செல்லும் விரைவு ரயில் இன்ஜின் கோளாறு பழனி அருகே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். நேற்று இரவு 9 மணிக்கு புறப்பட்ட சென்னை-பாலக்காடு ரயில் இன்று காலை 8 மணிக்கு பழனி வருவதாக இருந்தது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கோம்பைபட்டி என்ற பகுதியில் இன்ஜின் கோளாறு காரணமாக நடுவழியில் சுமார் ஒன்றரை மணி நேரமாக நின்றுவிட்டது. இதனால் அந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். என்ஜின் பழுது சரி செய்யப்படவில்லை எனில் மாற்று ரயில் என்ஜினை கொண்டுவந்து ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக  ரயில்வே ஊழியர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.