‘சேரி மொழி’ என நடிகை குஷ்பு பேசியதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. தமிழக காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. துறையின் தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நடிகை குஷ்புவின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Advertisment

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. துறையின் தலைவர் ரஞ்சன் குமார், தலைமையில் இன்று நடிகையும், பா.ஜ.க. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவின் வீட்டிற்கு முன்பு குவிந்த காங்கிரஸ் தொண்டர்கள், அவருக்கு தங்களின் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். பிறகு நடிகை குஷ்புவின் உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து, துடப்பத்தால் அடித்து, பிறகு சாணியை வாரி இரைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாரை போலீஸார் கைது செய்து பேருந்தில் ஏற்றிச் சென்றனர்.

Advertisment

Congress condemns actress Khushbu!

இந்த நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை குஷ்பு, "சேரி மொழி என நான் கூறிய வார்த்தையில் தவறு இல்லை; அதில் தெளிவாக இருக்கிறேன்; செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்" என தெரிவித்துள்ளார்.