Skip to main content

மீனவ கிராமங்களுக்கு இடையே மோதல்; கலவரத்தில் ஈடுபட்ட பத்துக்கும் மேற்பட்டோர் கைது

Published on 06/07/2022 | Edited on 06/07/2022

 

Conflict between fishermen village police arrested ten

 

நாகூரில் இருதரப்பு மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலால் வீடுகள், இருசக்கர வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. இந்நிலையில் மோதலில் ஈடுபட்ட இருதரப்பு மீனவர்களில் 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதட்டத்தை தணிக்க, மீனவ கிராமத்தில் கலவர தடுப்பு வாகனத்துடன் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. 

 

நாகை அடுத்துள்ள நாகூர் மேலப்பட்டினச்சேரி கிராம மீனவர்களுக்கும், கீழப்பட்டினச்சேரி கிராம மீனவர்களுக்கும் இடையே இடப்பிரச்சனையில் ஆரம்பித்த விவகாரம் துறைமுகத்தில் மீன் விற்பனை வரை முற்றியது. இதனால் இருதரப்பு மீனவர்களிடையே சாதாரணமாகத் துவங்கிய பிரச்சனை முன் விரோதமாக மாறி இரு ஊர் கலவரமாக மாறியுள்ளது. 

 

Conflict between fishermen village police arrested ten

 

இதற்கிடையில் பிரச்சனை தொடர்பாக இரு தரப்பு மீனவப் பிரதிநிதிகளையும் அழைத்து அரசு தரப்பில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி ஒற்றுமையாக மீன்பிடி தொழில் செய்ய அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் பிரச்சனை முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் நேற்று கீழப்பட்டினச்சேரி மீனவர் சுரேஷ் என்பவரை மேலப்பட்டினச்சேரி மீனவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மேலப்பட்டினச்சேரியைச் சேர்ந்த மற்றொரு சுரேஷை கீழப்பட்டினச்சேரி மீனவர்கள் பதிலுக்கு தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இரு தரப்பு மீனவர்களிடையே மீண்டும் கலவரம் மூண்டது. 

 

இந்த சம்பவத்தில் மேலப்பட்டினச்சேரி மீனவர்களின் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள், கீழப்பட்டினச்சேரி மீனவ இளைஞர்களால் சூறையாடப்பட்டன. அங்கிருந்த டி.வி, பிரிட்ஜ். இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையில் அதிவிரைவுப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  

 

Conflict between fishermen village police arrested ten

 

இந்நிலையில், கலவரத்தில் ஈடுபட்ட மேலப்பட்டினச்சேரி மற்றும் கீழப்பட்டினச்சேரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்களை நாகூர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பதட்டத்தை தணிக்க, மீனவ கிராமத்தில் கலவர தடுப்பு வாகனத்துடன் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.