Skip to main content

கலர் பொடி போட்டுப் பொரித்த இறைச்சிகள் பறிமுதல்

Published on 21/07/2023 | Edited on 21/07/2023

 

Confiscation of colored meats

 

குற்றாலம் பகுதியில் அசைவ உணவுக் கடைகளில் கலர் பொடி போட்டு இறைச்சிகள் பொரித்து வைக்கப்பட்ட நிலையில் உணவுக் கலப்படத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதனைப் பறிமுதல் செய்தனர்.

 

தென்காசி மாவட்டம் குற்றாலம் சத்தியா'ஸ் வீட்டு உணவகம் என்ற உணவகத்தில் நேற்று உணவுக் கலப்படத் தடுப்புப் பிரிவு அதிரடியாகச் சோதனை செய்தது. உணவுக் கலப்படத் தடுப்புப் பிரிவு அதிகாரி நாக சுப்பிரமணியன் தலைமையில் இந்த சோதனையானது நடைபெற்றது. அப்பொழுது அந்தக் கடையில் கலர் பொடிகள் போடப்பட்டுப் பொரிக்கப்பட்ட மீன், கோழி இறைச்சிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரி, பினாயில் கொண்டு அவை அனைத்தையும் ஒன்றாக ஒரு கூடையில் கொட்டி அழித்ததோடு, கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

தலைக்குப்புற கவிழ்ந்த மினி பேருந்து; ஐயப்ப பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

A mini bus carrying Ayyappa devotees met with an accident

 

தென்காசியில் ஐயப்ப பக்தர்கள் பயணித்த மினி பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மினி பேருந்து தலைகுப்புற விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நாமக்கல்லை சேர்ந்த பக்தர்கள் சிலர் சபரிமலைக்கு மாலை அணிந்து மினி பேருந்து மூலமாக சபரிமலை கோவிலுக்கு சென்று வந்தனர். சுவாமி தரிசனம் முடித்துக் கொண்டு வரும் வழியில் குற்றாலத்திற்கு சென்று குளித்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்பொழுது சிங்கிலிபட்டி பகுதியை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வந்த காரின் மீது ஐயப்ப பக்தர்கள் வந்த மினி பேருந்து மோதியது. இதில் பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐயப்ப பக்தர்கள் ஐந்து பேர் காயமடைந்தனர். காயத்துடன் மீட்கப்பட்ட பக்தர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஜேசிபி வாகனம் கொண்டுவரப்பட்டு பேருந்து நிறுத்தப்பட்டது. இந்த விபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

ஓரினச் சேர்க்கை மோசடி; வலைவிரிக்கும் வலைத்தள கும்பல்

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

gang of extorting money from youth through social media was caught in Tenkasi

 

தென்காசி மாவட்டத்தின் புளியங்குடி காவல்சரகத்தின் போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் படி தங்கள் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் வாகன சோதனை மற்றும் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அந்நேரம் புளியங்குடி பேருந்து நிலையம் அருகே வேன் ஸ்டாண்ட் ஓட்டுநர்களிடம் ஒரு கும்பல் கடும் வாய்த் தகராறில் ஈடுபட்டிருக்கிறது. அது சமயம் போலீசார் அந்தப் பக்கமாக வந்தபோது அவர்களைப் பார்த்து பீதியாகிப் போன அந்தக் கும்பல், அவசர அவசரமாகக் காரில் ஏறித் தப்பியிருக்கிறது. 

 

ஆனாலும் விடாத டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமையிலான போலீஸ் டீம், காரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்திருக்கிறார்கள். காரிலிருந்த ஆறு பேரையும் அப்படியே காவல் நிலையம் கொண்டு வந்திருக்கிறார்கள். டி.எஸ்.பி.யின் டீம் அவர்களிடம் உரிய பாணியில் நடத்திய விசாரணையில், அவர்கள் உள்ளூர் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ், அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், சிவகிரியைச் சேர்ந்த கவிக்குமார், அதே பகுதியின் கனகராஜ் உள்ளிட்ட நான்கு இளம் வாலிபர்களுடன் இரண்டு சிறார்கள் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

 

அருகிலுள்ள சிவகிரி பகுதியில் டிண்டர் ஆஃப் எனும் செல்போன் செயலி மூலம் வாடிக்கையாளர்களை ஒருங்கிணைத்துக் கொண்டு, அவர்களிடம் ஆசை வார்த்தை பேசி ஓரினச் சேர்க்கைக்கு வரவழைப்பது வழக்கமாம். இவர்களின் தூண்டிலில் சிக்குபவர்களிடம் இருக்கும் பணத்தைப் பறித்துக் கொண்டு விரட்டியடித்து விடுவார்களாம். பல நாட்களாக இந்த ஓரினச் சேர்க்கை மூலம் கொள்ளையை நடத்திப் பணம் பார்த்திருக்கிறார்கள். பல பேர், மான அவமானத்திற்கு அஞ்சி போலீஸ் பக்கம் போகாததால், இந்த சம்பவம் குறித்து எந்த தகவலும் வெளியே கசியாமல் இருந்திருக்கிறது. தற்போது வேன் ஸ்டாண்ட் வாய்த்தகராறு மூலம் கொள்ளை ரகசியம் அம்பலமேறிவிட்டதாம்.

 

இதுகுறித்து விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், அந்த ஆறு பேர் மீதும் 307வது ஐ.பி.சி. பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளார். மேல் விசாரணை நடக்கிறது என்றார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்