Skip to main content

ஊராட்சி ஒன்றிய பணிகளில் தி.மு.க குறுக்கிடுவதாகப் புகார்! அ.தி.மு.க கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

vComplaint that DMK is interfering in the work of the Panchayat Union! ADMK councilors petition district collector

 

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் தி.மு.க.வினர் குறுக்கீடுகள் செய்வதாகவும், அ.தி.மு.க மற்றும் பிற கட்சி கவுன்சிலர்களை தி.மு.க.வில் சேருமாறு வற்புறுத்துவதாகவும்  கூறி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். 

 

அ.தி.மு.க. புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் ஆ.அருண்மொழிதேவன், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஆகியோர் தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்பிரமணியத்திடம்  மாவட்ட ஊராட்சி குழு தலைவர் க.திருமாறன், அண்ணாகிராமம் ஒன்றிய குழு தலைவர் வி.ஜானகிராமன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய குழு தலைவர் கலையரசி கோவிந்தராஜ், குமராட்சி ஒன்றிய குழு தலைவர் பூங்குழலி பாண்டியன், துணைத்தலைவர் ஹேமலதா, நல்லூர் ஒன்றிய குழு தலைவர் செல்வி ஆடியபாதம், துணைத் தலைவர் ஜான்சிமேரி, புவனகிரி ஒன்றிய குழு தலைவர் சி.என்.சிவபிரகாசம், துணைத்தலைவர் வ.வாசுதேவன், கீரப்பாளையம் ஒன்றியக் குழு தலைவர் கனிமொழி தேவதாஸ் படையாண்டவர், துணைத் தலைவர் காஷ்மீர் செல்வி, கம்மாபுரம் ஒன்றியக்குழு தலைவர் மேனகா விஜயகுமார், துணைத் தலைவர் முனுசாமி, ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய குழு தலைவர் லதா ஜெகஜீவன்ராம்,  பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் கருணாநிதி, துணைத் தலைவர் மோகன சுந்தரம் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். 

 

அந்த புகார் மனுவில், "தி.மு.க ஆளுங்கட்சியாக வந்தவுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அத்துமீறி அதிகாரம் செலுத்தி அதிகாரிகளையும் மக்கள் பிரதிநிதிகளையும் மிரட்டி வருகின்றனர். வளர்ச்சிப் பணிகளிலும் குறுக்கீடு செய்து வருகின்றனர். ஊராட்சி ஒன்றிய தீர்மானங்கள், ஒப்பந்தங்கள் மூலமாக விடப்பட்ட பணிகளிலும் தலையிட்டு அதிகாரிகளை மிரட்டுகின்றனர். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. மற்றும் பிற கட்சி கவுன்சிலர்களை தி.மு.க.வில் சேருமாறு மிரட்டுகின்றனர்.

 

Complaint that DMK is interfering in the work of the Panchayat Union! ADMK councilors petition district collector

 

விருதாச்சலம் ஒன்றிய குழு தலைவர் மீது கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதியும், நல்லூர் ஒன்றிய குழு தலைவர் மீது கடந்த டிசம்பர் மாதம் 22-ஆம் தேதியும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி விருதாச்சலம் கோட்டாட்சியரிடம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மனு அளித்துள்ளனர். அதில் நல்லூர் ஒன்றியக் குழு தலைவருக்கு எதிராக வழங்கப்பட்ட மனுவில் அ.தி.மு.க கவுன்சிலர்களின் கையெழுத்தை போலியாக போட்டு, கடிதம் போலியாக வழங்கப்பட்டதாக உடனடியாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது. 

 

இந்நிலையில் நல்லூர் ஒன்றிய குழு கூட்டத்தை வரும் 20ஆம் தேதி கூட்டுவதாக கோட்டாட்சியர் அறித்துள்ளார். ஆனால் அதற்கு முந்தைய தேதியில் கொடுக்கப்பட்ட விருதாச்சலம் ஒன்றிய தலைவர் மீதான புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சட்டத்தின் படி நடக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளனர்.

 

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் அருண்மொழிதேவன், பாண்டியன் ஆகியோர், "தி.மு.க.வினரின் அரசியல் அதிகாரத்திற்கு அதிகாரிகள் துணை போகக் கூடாது. சட்டத்தின்படி செயலாற்ற வேண்டும். இல்லை என்றால் கட்சித் தலைமையிடம் பேசி அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம்"  என்று தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.