Skip to main content

யானைகளை வைத்து ஸ்ரீரங்கம் கோவிலில் 'சூட்டிங்?'-பாகன்கள் மீது புகார்!

Published on 22/08/2021 | Edited on 22/08/2021

 

Complaint against " video shooting" - Srirangam temple with elephants!

 

திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமாக ஆண்டாள் மற்றும் லட்சுமி என 2 யானைகள் உள்ளன. இவற்றின் பாகங்களாக ராஜேஷ், அப்பு, சரண் ஆகியோர் உள்ளனர். ஆண்டாளை கவனிக்கும் ராஜேஷ் சீனியர் என்பதால் லட்சுமியை கவனிக்கும் பாகன்கள் அப்பு மற்றும் சரண் ஆகியோர் அவரது கட்டுப்பாட்டில் பணியாற்றி வருகின்றனர். நேற்றைய தினம் ஸ்ரீரங்கம் கோவில் யானைகள் ஆண்டாள் மற்றும் லட்சுமி ஆகியவை மழையில் நனைந்து விளையாடும் வீடியோ வெளியானது.

 

இந்த வீடியோ மீடியாக்களுக்கு கொடுக்கப்பட்டு நியூஸ் சேனல்களில் செய்தியானது. கடந்த சில நாட்களாக கோவிலில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், யானைகள் எப்போது வெளியே வந்தன. அவை மழையில் நனையும் போது யார் வீடியோ எடுத்தது? என பக்தர்கள் சிலர் அதிகாரிகளிடம் கேள்வி கேட்க, அதிகாரிகளால் பதில் சொல்ல முடியவில்லை. இதுதொடர்பாக கோவில் அலுவலர்கள் அவசர அவசரமாக நடத்திய விசாரணையில், யானைகளை வெளியே கொண்டுவந்து மழையில் நனைய வைத்து வீடியோ எடுத்தது பாகன் கோபி என்பது தெரியவந்தது.

 

இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. யானைகள் கோவிலின் சொத்து. பாகன்களும் பணியாளர்கள்தான். கோவிலின் முறைக்காக யானைகள் அழைத்து வர வேண்டும் பின்னர் யானைகளை கொட்டைகையில் அடைக்கப்பட வேண்டும். அவற்றை பாராமரிக்கும் பணியினை மட்டும் பாகன்கள் செய்ய வேண்டும். ஆனால் நேற்றைய தினம் யாருடைய அனுமதியும் இல்லாமல் கொட்டையில் இருந்து யானைகளை பாகன்கள்  தங்களது விருப்பத்திற்கு வெளியே அழைத்து வந்து சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக மழையில் நனைய விட்டு சினிமா சூட்டிங் போல வீடியோ பதிவுசெய்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் பக்தர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.

Next Story

கூட்டமாக படையெடுத்து வந்த யானைகள்; அச்சத்தில் கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Coimbatore Thondamuthur elephant issue

மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் கோடைக் காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் உணவு மற்றும் குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இத்தகைய சூழலில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூரில் கடந்த 8 ஆம் தேதி குடிநீர் தேடி பெண் யானை ஒன்று அப்பகுதிக்கு வந்துள்ளது. அச்சமயத்தில் அங்குள்ள குழியில், இந்த பெண் யானை தவறி விழுந்துள்ளது. இதனால் உடல்நலம் குன்றிய பெண் யானை உயிருக்குப் போராடி வந்தது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னர் மருத்துவ குழுவினருடன் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் யானைக்கு உணவாக பசுந்தீவனம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை கொடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி என்ற இடத்தில் உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் படுத்த 45 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு வனத்துறையினர் நேற்று (11.04.2024) சிகிச்சை அளித்தனர். மேலும் பெண் யானையின் குட்டி பாதிக்கப்பட்ட யானையின் பக்கத்திலேயே பரிதவித்து நின்று கொண்டிருந்தது பார்ப்போர் மனதையும் கலங்க செய்தது.

இந்நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தீனம் பாளையத்தில் ஒரே நேரத்தில் 15 காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைந்தன. இதனால் அப்பகுதி கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த காட்டுயானைகள் அங்குள்ள விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வந்தன. இதனைக் கண்காணித்து வந்த வனத்துறையினர் 15 காட்டு யானைகளையும் வனப்பகுதிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இனையத்தில் பரவி வைரலாகி வருகிறது.