Skip to main content

வேங்கைவயலில் தனி நீதிபதி சத்தியநாராயணா குழு ஆய்வு

Published on 06/05/2023 | Edited on 06/05/2023

 

committee of single judge Satyanarayana has conducted an inquiry in Vengaivasal

 

வேங்கைவயலில் தனி நீதிபதி சத்தியநாராயணா குழு ஆய்வு செய்துள்ளது. 

 

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் தனிப்படை போலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணைக் குழுவை மாற்றக் கோரிக்கை எழுந்த நிலையில், சிபிசிஐடிக்கு விசாரணை மாற்றப்பட்டது. ஆனால், 4 மாதங்கள் கடந்தும் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. வழக்கமான வழக்குகளைப் போல இல்லாமல் அறிவியல் பூர்வமாக கண்டறியப்பட வேண்டிய வழக்காக உள்ளதால் தண்ணீரில் மனிதக்கழிவு கலந்ததை ஆய்வு செய்து அதில் 2 ஆண்கள், ஒரு பெண்ணின் கழிவு கலந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் யாருடைய கழிவு கலக்கப்பட்டது என்பதை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை செய்ய அனுமதி கேட்கப்பட்டு முதல் கட்டமாக 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டதில் 3 பேர் மட்டுமே பரிசோதனைக்கு ஆஜரானார்கள். மீதமுள்ள 8 பேர் நீதிமன்றம் சென்றுள்ளனர். இரண்டாம் கட்டமாக இறையூரில் 8 வேங்கைவயலில் 2 பேர் என 10 பேரிடம் திங்கள் கிழமை டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சத்தியநாராயணா குழுவினர் வேங்கைவயல் கிராமத்திற்குச் சென்று தண்ணீர் தொட்டிகளை ஆய்வு செய்துள்ளனர். ஆய்வுக்குப் பிறகு ஆய்வுக்கூட்டம் நடந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

"வேங்கை வயல் உட்பட எந்த வாக்குப்பதிவு மையத்திலும் மறு வாக்குப்பதிவு இல்லை" - திருச்சி ஆட்சியர்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Trichy Collector says There is no re-voting in any polling center

தமிழகத்தில் நேற்று ஒரே கட்டமாக 18 -வது நாடாளுமன்ற தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணிக்கு முடிவுற்றது. இதனை தொடர்ந்து வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட் மின்னணு வாக்கு இயந்திரங்கள், விவி பேட் சீல் வைக்கப்பட்டு வாக்குச்சாவடியில் இருந்துவாக்கு எண்ணிக்கை மையமான ஜமால் முகமது கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, கட்டுப்பாட்டு இயந்திர அறையில் வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு தேர்தல் பொது பார்வையாளர் தினேஷ்குமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரதீப்குமார்  வாக்குப்பட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையை அடைத்து அனைத்து கட்சியினர் முன்னிலையிலும் சீல் வைக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரதீப்குமார் கூறியதாவது:-ஒவ்வொரு வாக்கு சாவடிகயிலிருந்தும் வாக்கு இயந்திரங்கள் நேற்று ஜமால் முகமது கல்லூரியில் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 67.42% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து இருந்தால் கண்டிப்பாக இன்னும் வாக்கு சதவீதம் உயர்ந்திருக்கும். நகர்ப்புற பகுதிகளில் வாக்கு சதவீதம் குறைவாகத்தான் உள்ளது.

நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சில கோளாறுகள் காரணமாக விவிபேட் மட்டும் கட்டுப்பாட்டு கருவிகள் மாற்றம் செய்யப்பட்டது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில்  விதிமீறல்கள் தொடர்பாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த நேரத்தில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 5.8 கோடி , தங்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் 8.6 கோடி வரை பறிமுதல் செய்துள்ளோம். அனைத்திற்கும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானவரித்துறையினர் அதற்கான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

மூன்றடுக்கு பாதுகாப்பு பணி இங்கு போடப்பட்டுள்ளது. இதில் ஒரு அடுக்கில் துணை ராணுவ கம்பெனியை சேர்ந்தவர்கள் இருப்பார்கள். 24 மணி நேரமும் சிசிடிவி கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு நாளில் சில நிறுவனங்கள் செயல்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக ட்விட்டரில் கூட நமக்கு ஒரு புகார் வந்திருந்தது. உடனடியாக அந்த நிறுவனத்தை அணுகி விடுமுறை விட சொல்லி ஏற்பாடு செய்தோம். திருச்சி மக்களவைத் தொகுதியில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் உட்பட, எந்த வாக்கு பதிவு மையத்திலும் மறுவாக்குப் பதிவு இல்லை. திருச்சி மக்களவைத் தொகுதியில், 67.42 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இவ்வாறு திருச்சி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.