Skip to main content

‘மேடையில் வந்து சொல்லுங்கள்’ - நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சியில் பரபரப்பு

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

Come on the stage and say it say Nirmala Sitharaman is sensational at the show

 

கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் நடைபெற்ற வங்கிக் கடன் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு தொழில்முனைவோர்களுக்கு வங்கிக் கடன் உதவிகளை வழங்கினார். நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சியின் போது கடன் ஆணைகளை வழங்கி மேடையில் பேசிக்கொண்டிருந்தார்.

 

அப்போது தொழில் முனைவோர் சதீஷ் என்பவர் செய்தியாளர்களிடம், “சிறு, குறு தொழில்முனைவோருக்கு உத்தரவாதம் இன்றி கடன் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததது. இருப்பினும் தனக்குக் கடன் மறுக்கப்படுகிறது. இது குறித்து நான் பிரதமர் அலுவலகத்திற்கும் புகார் அளித்துள்ளேன். அரசு கடன் உதவி உறுதியாக வழங்கப்படும் என அறிவித்த நிலையில் ஏன் எனக்கு கடன் தரவில்லை என கேட்க வந்தேன்” எனத் தெரிவித்தார்.

 

இதனையடுத்து நிர்மலா சீதாராமன், “லோன் கொடுக்கிறோம் என்பதை காட்டுவதற்காக 10 பேருக்கு லோன் கொடுக்குறாங்க எனச் சொல்கிறார்கள். ஜனநாயகத்தின் தூணாக உள்ள மீடியா, அவரிடம் பேட்டி எடுத்து நல்ல வேலை செய்திருக்கிறார்கள். நண்பரே மேடைக்கு வாங்க. மோடி ஆட்சியில் எல்லோரின் முன்னேற்றத்திற்கும் பாடுபடுவோம். உங்களுக்கு ஏன் லோன் கிடைக்கவில்லை என்பதை மேடையில் வந்து சொல்லுங்கள்” என தொழில் முனைவோர் சதீஷை அழைத்தார்.

 

இதையடுத்து மேடையில் ஏறி  சதீஷ் பேசுகையில், “முதலில் கடன் வழங்க ஒப்புதல் அளித்தார்கள். ஆனால் அதன் பிறகு வரவில்லை.40 லட்ச ரூபாய்க்கான கடனுக்கான உத்தரவாதத்தை வழங்கத் தயார் என்று கூறிய பிறகும் தனக்கு கடன் கிடைக்கவில்லை” என தெரிவித்தார். அப்போது நிர்மலா சீதாராமன், “இது பற்றி சம்பந்தப்பட்ட வங்கியிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

கோயில் அருகே மனித மண்டை ஓடுகள்! மாந்திரீக பூஜையா? 

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Coimbatore ramanathapuram issue

 

கோவை மாவட்டம், கோவையை அடுத்த ராமநாதபுரம் பகுதியில் காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் அருகே நேற்று மனித மண்டை ஓடு இரண்டும், சில எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டன. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. 

 

கோவை மாவட்டம், கோவையை அடுத்த ராமநாதபுரம் பகுதியில் காமாட்சி அம்மன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோயில் அமைந்துள்ள சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், அந்தக் கோயில் அருகே மனித மண்டை ஓடு போல் தென்பட்டதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். பிறகு சந்தேகத்துடன் அருகே சென்று பார்த்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அங்கு இரு மனித மண்டை ஓடுகள் வெட்ட வெளியில் வீசப்பட்டுள்ளன. மேலும், அதன் அருகே சில எலும்புகள் ஒரு கவரில் கட்டி வீசப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக ராமநாதபுரம் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதற்குள் விஷயம் வெளியே தெரிந்து அங்கு அதிகளவில் மக்கள் குவியத் துவங்கினர். 

 

அந்தத் தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் உடனடியாக மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி, அங்கிருந்த மனித மண்டை ஓடுகளையும், கவரில் இருந்த எலும்புகளை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட எலும்புகளும், மண்டை ஓடுகளும் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ராமநாதபுரம் போலீஸார் விசாரணையை துவங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், ஒரு மண்டை ஓடு சரியாக பாதி துண்டிக்கப்பட்டிருக்கிறது. இது மருத்துவ மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பில் பயன்படுத்தும் முறை. அதனால், இது மருத்துவ பயிற்சிக்கு உபயோகப்படுத்திய மண்டை ஓடுகளாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. 

 

ஆனால், அப்படி பயன்படுத்தும் எலும்புகள் முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இது போல், பொதுவெளியில் வீசிவிட்டு செல்ல முடியாது. எனவே இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணைக்கு பிறகே முழு விவரம் தெரிய வரும். 

 

மனித மண்டை ஓடு கோயிலுக்கு அருகே கிடைத்துள்ளதால், இது மாந்திரீகத்திற்கு உபயோகிக்கப்பட்டதா எனும் கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. மேலும், கொலை செய்யப்பட்ட மண்டை ஓடுகளா எனும் கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவையில் கோயில் அருகே இரு மனித மண்டை ஓடுகளும், சில எலும்புகளும் பொதுவெளியில் கிடந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“நான் போயி ரோட்ல உட்காரவா?” - போலீசாரை மிரட்டிய எஸ்.பி. வேலுமணி! 

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

SP Velumani have conflict with police in kovai

 

தமிழகத்தின் இருபெரும் கட்சிகளுள் ஒன்று அதிமுக. பல்வேறு உட்கட்சிப் பிரச்சனைகளைத் தாண்டி ஓரணியில் திரண்ட எடப்பாடி தலைமையிலான அதிமுக, தாங்கள் தூக்கிச் சுமக்கும் வீண் சுமையாக பாஜக கூட்டணியை பார்த்தது. இதனால், பாஜக மற்றும் அதிமுக தலைவர்களிடையே வார்த்தை மோதல்கள் ஏற்பட்டது. விளைவு, அதிமுக பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இருப்பினும், இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்ளாமல் மென்மையான போக்கை கையாளுவதால், இது ஒரு பொய்யான நாடகம் என எதிர்க்கட்சிகள் பலவும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன.

 

ஆனால், இத்தனை நாளாக பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததால்தான் நமக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, இஸ்லாமியத் தலைவர்களையும், கிறிஸ்தவ தலைவர்களையும் தேடித் தேடிச் சென்று சந்தித்து வந்தார். இந்த நிலையில், கோவை முப்பெரும் விழா மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. அதே நேரம், மாற்றுக்கட்சியினர் 3 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் இணையும் மற்றொரு விழாவும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியிலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். அவரது முன்னிலையில் 3 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் இணைய உள்ளதாக அதிமுக தரப்பில் சொல்லப்படுகிறது.

 

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில், தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பின் சார்பில், முப்பெரும் விழா மாநாடு நடைபெறுகிறது. இந்த முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக, அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார். இந்த நிலையில், கிறித்துவ கூட்டமைப்பு மற்றும் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று, அவிநாசி சாலையில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மேலும், உரிய அனுமதி பெறாமலும் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பதாகைகளை போலீசார் அகற்றுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிமுக தொண்டர்கள் மற்றும் மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்தவர்கள், கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் திரண்டு, பேனர்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநாட்டு பந்தலை பார்வையிடுவதற்காக வந்த முன்னாள் அமைச்சர் வேலுமணியும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

 

அப்போது வேலுமணி, "காவல்துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை இங்கு என்னால் வரவைக்க முடியும். நான் போய் சாலை மறியலில் ஈடுபடவா? நான் முன்னாள் அமைச்சர், சட்டமன்ற கொறடா. உங்களுக்குப் பிரச்சனை என்றால் உயர் அதிகாரியை வரச் சொல்லுங்கள்.. வக்கீல எதுக்கு மிரட்டுறீங்க.." என காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், வேலுமணியுடன் இருந்த சூலூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ. கனகராஜ் மற்றும் அதிமுகவினரும் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் திமுக பேனர்கள் வைக்க மட்டும் அனுமதி கொடுக்கும் போலீஸ், எதிர்க்கட்சித் தலைவருக்கு பாதுகாப்பு கொடுப்பதில்லை எனவும், கிருஸ்தவர்கள் நடத்தும் மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காக இதுபோன்று நடந்து கொள்ளக் கூடாது எனவும் போலீசாரிடம் கேட்டுக் கொண்டார். பொது இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றுமாறும் தனியார் இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்ற வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார். 

 

இதுகுறித்து கிறிஸ்துவ கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மேசாத் ராஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது, “கிறித்துவ மாநாட்டுக்கு பேனர் வைக்க போலீசார் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பாரதிய ஜனதா கட்சி நிகழ்வுகளின் போது பேனர் வைக்க அனுமதித்த போலீசார், சிறுபான்மை சமூகத்தினரின் நிகழ்வுக்கு பேனர் வைக்க திட்டமிட்டு அனுமதி மறுக்கின்றனர். திமுக அரசு சமூக நீதி பேசுவதாக கூறிக்கொண்டு சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எங்களது கோரிக்கைகளை தெரிவிக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநாட்டில் பங்கேற்க  அழைப்பு விடுத்திருந்தோம். அதைத் தற்போது அரசியலாக முயற்சித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார். நள்ளிரவு சமயத்தில் அதிமுகவினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து பிரிந்த பிறகு, கிறிஸ்தவ அமைப்பு மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்