Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; லாரி ஓட்டுநரை கல்லால் அடித்துக் கொன்ற கல்லூரி மாணவன்!

Published on 01/04/2023 | Edited on 01/04/2023

 

 College student arrested in case lorry driver

 

நாமக்கல் அருகே, திருமணத்தை மீறிய உறவில் இருந்த லாரி ஓட்டுநரை கல்லால் அடித்துக் கொலை செய்த கல்லூரி மாணவனை சேந்தமங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர்.     

 

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் சுரேஷ் (45). இவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார். சுரேஷின் மனைவி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து அவர் தனது மகள், பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், லாரிக்குச் செல்லும்போது எருமப்பட்டி அருகே வசிக்கும் முத்தையன் மனைவி கஸ்தூரி என்பவருடன் சுரேஷுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்களுக்குள் நெருக்கம் அதிகமானதை அடுத்து, அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். சில நேரங்களில் கஸ்தூரி வீட்டிலேயே இரவு தங்கவும் ஆரம்பித்தார். கஸ்தூரிக்கு 19 வயதில் ஒரு மகன் உள்ளார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பி.இ., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தனது தாயுடன், லாரி ஓட்டுநர் சுரேஷ் உறவு வைத்திருப்பது கஸ்தூரியின் மகனுக்கு பிடிக்கவில்லை. அக்கம்பக்கத்தினரும் அவரை கேலி செய்து வந்ததால், சுரேஷுடனான தொடர்பை விட்டுவிடுமாறு கஸ்தூரியிடம் அவரது மகன் பலமுறை கூறியுள்ளார். சுரேஷும் அதை கண்டுகொள்ளவில்லை.    

 

இந்நிலையில், மார்ச் 29 ஆம் தேதி இரவு, சுரேஷ் குடி போதையில் கஸ்தூரி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கஸ்தூரியின் மகன், எங்கள் வீட்டுக்கு இனி நீ வரக்கூடாது எனக்கூறி அவரிடம் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் கைகலப்பாக மாறியது. ஆத்திரம் அடைந்த கஸ்தூரியின் மகன், கீழே கிடந்த கல்லை எடுத்து சுரேஷை தாக்கியுள்ளார். இதில், தலையின் பின் பக்கத்தில் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே சுரேஷ் இறந்தார். இதைப் பார்த்து பதறிப் போன கஸ்தூரியின் மகன், ஒரு மினிடோர் ஆட்டோக்காரரை வாடகைக்கு அழைத்து வந்துள்ளார். அவரிடம், சுரேஷ் எனக்குத் தெரிந்தவர்தான். அவர் குடிபோதையில் கீழே விழுந்துவிட்டார். அவரையும், அவருடைய மோட்டார் சைக்கிளையும் வீட்டில் விட்டு விட்டு வந்துவிடலாம் எனக் கூறியுள்ளார். இதையடுத்து சுரேஷின் சடலத்தையும், மோட்டார் சைக்கிளையும் மினிடோர் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு நள்ளிரவு நேரத்தில் ராமநாதபுரம் புதூருக்குச் சென்றுள்ளார். அவருடைய வீட்டின் முன்பு சுரேஷின் சடலத்தையும், மோட்டார் சைக்கிளையும் போட்டுவிட்டு அங்கிருந்து அவர்  தப்பி ஓடி விட்டார்.    

 

இதுகுறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், சுரேஷை கொலை செய்தது கஸ்தூரியின் மகன்தான் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'பிரதான தொழில் திமுகவால் நசிந்து நலிந்து வருகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
'The main industry is being destroyed by DMK'-Edappadi Palaniswami's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நாமக்கலில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். கூட்டத்தில்  அவர் பேசுகையில், ''கைத்தொழில் நெசவாளர்கள் பாதிப்பாகாத வகையில் பார்த்துக் கொண்ட அரசு அதிமுக .அரசு ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பலர் கைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். சங்ககிரி, திருச்செங்கோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. அந்தப் பகுதிகளில் நன்கு அறிமுகமானவன் நான். எல்லா இடத்திற்கும் நான் சென்று வந்திருக்கின்றேன். இந்த விசைத்தறி தொழில் ஒரு பிரதான தொழிலாக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான பேர் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.

இன்றைக்கு அந்தத் தொழில் எல்லாம் நசுங்கி நலிவடைந்து வருகிறது. இந்தத் தொழில் சிறக்க ஏதாவது இந்த அரசு நடவடிக்கை வேண்டும் என குரல் கொடுத்தால், திமுக அரசு எதையுமே கண்டுகொள்ளாமல் இருக்கிறது. விலையில்லா வேட்டி, சேலைகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் உரிய நேரத்தில் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு ஆர்டர் கொடுத்தோம். இதனால் அந்தத் தொழில் பாதுகாக்கப்பட்டது. ஆனால் 2021 சரியான ஆர்டர் கொடுக்கவில்லை. அதனால் வேலை வாய்ப்பை இழந்தார்கள். 2024ல் தரமான நூல் கொடுக்கவில்லை. அதனால் இப்பொழுது தொழில் சரிவை கண்டுள்ளது. ஆகவே அதிமுக ஆட்சி உங்கள் ஆதரவோடு மீண்டும் மலரும். அப்பொழுது இந்தத் தொழில் செழிக்கும். திமுகவின் பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் வரை இப்படித்தான் இருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலம் வர வேண்டும் என்றால் மீண்டும் அதிமுக கட்சிக்கு வர வேண்டும். அப்பொழுதுதான் ஏழைகள் இல்லை என்ற சொல்லை உருவாக்க முடியும்''என்றார்.