Skip to main content

பத்து ஆண்டு கோரிக்கையை பத்து நிமிடத்தில் நிறைவேற்றிய ஆட்சியர்... கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த மாற்றுத்திறனாளி!

Published on 02/09/2021 | Edited on 02/09/2021

 

Collector who fulfilled the ten year request in ten minutes

 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் நேற்று பள்ளி கல்லூரிகள் திறந்ததையடுத்து அங்குச் சென்று ஆய்வுப் பணிகளை முடித்துக்கொண்டு மீண்டும் ஆட்சியர் அலுவலகம் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக நுழைவுவாயில் அருகே இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில் கையில் செருப்பு அணிந்து சென்ற ஒரு மாற்றுத்திறனாளியைப் பார்த்தார் ஆட்சியர். உடனே காரை நிறுத்தச் சொல்லி காரில் இருந்து இறங்கி அந்த மாற்றுத்திறனாளி இடம் விசாரித்தார்.

 

அந்த மாற்றுத்திறனாளி நெர்குணம் என்ற கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன்(46) பிறந்து எட்டு மாதத்தில் தமக்கு இளம்பிள்ளை வாத நோய் ஏற்பட்டு இரண்டு கால்களும் செயல் இழந்து விட்டதாகவும் தற்போது கைகள் மூலம் தையல் வேலையை செய்து வருவதாக கூறியுள்ளார். மேலும் அவர் கடந்த பதினைந்தாண்டுகளுக்கு முன்பு அரசு எனக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கியது. அது பழுதடைந்து உடைந்து சேதம் ஆகிவிட்டது. அதன் பிறகு ஒரு புதிய சைக்கிள் வழங்கக் கோரி கடந்த 10 ஆண்டுகளாக  மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு அலைந்து கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார். அதே போல் யாரும் தனக்கு உதவி செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

 

உடனே மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளி நல அலுவலரைத் தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு ஒரு மூன்று சக்கர சைக்கிளை கொண்டு வருமாறு கூறியுள்ளார். அதன்படி வரவழைக்கப்பட்ட மூன்று சக்கர சைக்கிளை மாற்றுத்திறனாளி முனியப்பனிடம் வழங்கினார் ஆட்சியர் மோகன். தமது 10 ஆண்டுக்கால கோரிக்கையை பத்து நிமிடத்தில் நிறைவேற்றிய ஆட்சியருக்கு மாற்றுத்திறனாளி முனியப்ப கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். இதை நேரில் பார்த்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரின் சிறப்பான நடவடிக்கையைக் கண்டு அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.