Skip to main content

அப்துல் கலாம், ஜெ' நினைவாகத் தென்னங்கன்றுகளுக்குப் பாளை பூஜை... குடும்பத்தோடு பொங்கல் வைத்து வழிபாடு...

Published on 14/06/2020 | Edited on 15/06/2020

 

coconut tree Ponnamaravathi Pudukkottai


தமிழக விவசாயிகள் தாங்கள் விதைப்புக்கு முன்பும் அறுவடையின் போது இயற்கையை வணங்கி விளைபொருளை வைத்து வழிபட்ட பிறகே வீட்டிற்கு எடுத்துச் செல்வது வழக்கம். விவசாயிகளின் முதல் கடவுள் விவசாயம். அதே போல தென்னங்கன்றுகள் நடவு செய்து பராமரித்து அந்த மரங்கள் முதல் பாளை வெளிவரும் போது அதற்காகப் பொங்கல் வைத்து வழிபடும் பழக்கம் இன்றளவும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
 


இந்த நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் ஏனாதி ஊராட்சி பிடாரம்பட்டி அரமேட்டில் விவசாயி வெள்ளைக்கண்ணு அழகு என்பவர் தோட்டத்தில் மா, பலா, வாழை, கொய்யா, எலுமிச்சை, சப்போட்டா, நெல்லி, உள்ளிட்ட பல வகை மரங்களும் தென்னை மரங்களும் உள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் மறைந்த சேந்தன்குடி கற்பகசோலை மரம் தங்கச்சாமி தனது தோட்டிலும் பொது இடங்களிலும் ஒவ்வொரு தேசிய, மாநில தலைவர்களின் பிறப்பு, இறப்பு நாட்களை நினைவு கூறும்விதமாக மரக்கன்றுகளை வைத்து வளர்த்து வந்தார். அவரது தோட்டத்தில் இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர், ராஜிவ்காந்தி உள்ளிட்ட தலைவர்களின் நினைவாக நடப்பட்ட ஏராளமான மரங்கள் உள்ளது. பல தலைவர்களின் நினைவாக நடப்பட்ட மரங்கள் கஜா புயலில் சாய்ந்து விட்டது. 
 

 

 

coconut tree Ponnamaravathi Pudukkottai


அதே போல அழகு தனது தோட்டத்தில் சுமார் 90 தென்னை கன்றுகளை நட்டு வளர்த்துள்ளார். இப்போது மரங்களாக பலன் தருகிறது. இதில் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் மற்றும் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் நினைவாகவும் தென்னங்கன்றுகளை நட்டு வளர்க்கிறார். அந்த இரு தென்னை மரங்களும் தற்போது பாளை தள்ளியுள்ளது. 

இதைப் பார்த்த அழகு, இதில் தமிழர்களின் பாரம்பரிய முறையில் விவசாயிகள் செய்வது போல அழகு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், குழந்தைகளும் பால், பழம், பூ, இனிப்புப் போன்றவற்றை தட்டுகளில் வைத்து சீர் எடுத்துக் கொண்டு பொங்கல் கூடை சுமந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து தென்னைமரத்தின் முன்பு பொங்கல் வைத்துச் சிறப்புப் பாளை பூஜை நடத்தி வழிபட்டனர். 
 

http://onelink.to/nknapp


மேலும் பொங்கல் பிரசாதங்களை அனைவருக்கும் வழங்கியதுடன் அங்கேயே சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டு கலந்துகொண்ட அனைவருக்கும் கோழி அடித்து விருந்து உபசரிப்பு நடத்தினர். கிராமங்களில் இன்னும் இதுபோன்ற கலாச்சார நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் உள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
The vengaivayal Affair Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. 

Next Story

பணிமனையிலிருந்து கடத்தப்பட்ட அரசு பேருந்து; அதிர்ச்சியளிக்கும் பின்னணி

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
government bus hijacked from the workshop met with an accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இரவு நேரங்களில் பணிமனைக்கு வரும் பேருந்துகளில் பழுதுபார்க்க வேண்டிய பேருந்துகளை பணிமனைக்குள்ளும் மற்ற பேருந்துகளை சாலை ஓரத்தில் நீண்ட வரிசையாகவும் நிறுத்திவிட்டு ஓட்டுநர் நடத்துநர்கள் ஓய்வுக்கு செல்வது வழக்கம்.

நேற்று இரவும் இதே போல சாலை ஓரம் 12 பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தது. ஊழியர்கள் ஓய்வு அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டனர். இன்று சனிக்கிழமை அதிகாலையில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் அரசு பேருந்து ஒன்று கண்டெய்னர் லாரியில் மோதி விபத்து என்று தகவல் வர போக்குவரத்து கழக அதிகாரிகள் வெளியே சென்று பார்த்த போது அறந்தாங்கியில் இருந்து திருவாடனை செல்லும் TN 55 N 0690 பேருந்தை காணவில்லை. அந்த பேருந்து தான் விபத்திலும் சிக்கியிருந்தது தெரிய வந்தது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடிவந்து பார்த்த போது கண்டெய்னர் ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் ஒரு நபர் நான் தான் பஸ் ஓட்டி வந்தேன் என்று சொல்லிக்கொண்டிருக்க அவரைப் பார்த்த பலரும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அவரை கண்டுகொள்ளவில்லை.

government bus hijacked from the workshop met with an accident

ஆனால் அந்த நபரோ நான் தான் பஸ் ஓட்டுனேன் லாரியில மோதிடுச்சு. அதுல எனக்கு கால்ல சின்ன காயம் பாருங்க என்று காலில் உள்ள சிறிய ரத்த காயத்தை காட்டியுள்ளார். அதன் பிறகு அந்த நபர் அறந்தாங்கி அழைத்துவரப்பட்டு விசாரிக்கும் போது ஒரே பதில் தான், ‘நான் தான் பஸ் எடுத்துடு போனேன். லாரியில மோதிடுச்சு கால்ல காயம்...’ என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை. அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

போலீசார் தலைசுற்றி நிற்க அந்த நபரின் படத்தைப் பார்த்ததும் நமக்கு கடந்த 13 ந் தேதி அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டையில் இருந்து ஒரு டாடா ஏஜ் வாகனத்தை எடுத்துக் கொண்டு 15 கி மீ தூரம் சென்றதும் கீரமங்கலம் கடந்து ஆவணத்தில் வைத்து பிடிக்கப்பட்டதும் தெரிந்ததால் 13 ந் தேதி எடுக்கப்பட்ட அந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் படத்தை தேடிப் பார்த்த போது இரண்டும்ஒரே நபர் தான். கடந்த வாரம் டாடா ஏஸ் வாகனம் ஓட்டிய அன்று அணிந்திருந்த அதே சட்டை தான் இன்று பஸ் எடுத்துச் சென்ற போதும் போட்டிருந்தார்.

நன்றாக வாகனம் ஓட்டத் தெரிந்த இந்த நபர் ஏதோ காரணங்களால் மனநலம் பாதிக்கப்பட்டு ஊர் ஊராக சுற்றிதிரிந்தாலும் வாய்ப்புக் கிடைக்கும் போது வாகனங்களை ஓட்டிச் சென்றுவிடுகிறார் என்பது தெளிவாகிறது. நேற்று இரவு இந்த நபர் தான் பணிமனை அருகே சுற்றிவந்தார் என்கிறார்கள் போக்குவரத்துக்கழக ஊழியர்கள். மனநலம் பாதிக்கப்பட்ட இந்த நபரால் இதுவரை 2 சம்பவங்கள் நடந்துள்ளது. இவரை மனநல சிகிச்சை மையத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்காமல் வெளியில் விட்டால் இன்னும் எத்தனை வாகனங்களை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்துவாரோ? என்று கவலை தெரிவிகின்றனர் அப்பகுதியினர்.