Skip to main content

கூட்டுறவு வங்கி இடமாற்றம்... பொதுமக்கள் முற்றுகை....!

Published on 10/11/2020 | Edited on 10/11/2020

 

Co-operative Bank Transfer Public Siege ....!

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ளது தொழுதூர். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில், இந்த ஊர் அமைந்துள்ளது. இங்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்குச் சொந்தமான, கிராம கிளைக் கூட்டுறவு வங்கி, சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த வங்கியில் இப்பகுதியைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அங்கத்தினராக தங்களைப் பதிவு செய்துகொண்டு வங்கியில் வரவு செலவு கணக்கு வைத்துள்ளனர். 


இந்த நிலையில் இந்தக் கூட்டுறவு வங்கியை முன் அறிவிப்பின்றி ராமநத்தம் பகுதிக்கு இடமாற்றம் செய்யும் பணியில், வங்கி அதிகாரிகள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், 200க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டு வங்கியை இடமாற்றம் செய்வதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்து வங்கி முன்பு நேற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 

இந்தத் தகவல் ராமநத்தம், காவல் நிலையத்திற்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முற்றுகையில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வாடிக்கையாளர்கள், மக்களின் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட வங்கி உயரதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்தனர். அதனை ஏற்று அங்கிருந்து, பொதுமக்களும் வாடிக்கையாளர்களும் கலைந்துசென்றனர். இதனால், தொழுதூர் பகுதியில் பெரும் பரபரப்பாகக் காணப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

திருட்டு ஆடுகளை வாங்கிய அதிமுக பிரமுகருக்கு நேர்ந்த கொடூரம்

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
AIADMK leader who bought stolen goats in Cuddalore was brutally treated

கடலூர் வண்டிப்பாளையம், ஆலைக்காலனியைச் சேர்ந்தவர் புஷ்பநாதன்(43). அதிமுக மாவட்ட பிரதிநிதி மற்றும் கடலூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலராக இருந்துள்ளார். இவர் கடந்த 29ஆம் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு  வந்த மர்ம நபர்கள் புஷ்பநாதனை வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து கொலையாளிகளைப் பிடிக்க கடலூர் டிஎஸ்பி பிரபு தலைமையில் ஒரு தனிப்படையும், இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையில் ஒரு தனிப்படையும் அமைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அப்பகுதியில் சிசிடிவி கேமரா பதிவுகள், அப்பகுதி செல்போன் டவர்கள், புஷ்பநாதனின் செல்போன்களை ஆய்வு செய்தனர். தனிப்படை போலீசார் கடலூர், வண்டிபாளையம் ஆலைக்காலனி பகுதியைச் சேர்ந்த தணிகாசலம் மகன் நேதாஜி (24).  கடலூர் வசந்தராயன்பாளையம் பாலன் காலனி பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் சந்தோஷ்குமார்(23), கடலூர் வண்டிபாளையம் ஆலைக்காலனி பகுதியைச் சேர்ந்த முரளி மகன் அஜிஸ் (23) ஆகிய 3  இளைஞர்களைப் பிடித்து தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

AIADMK leader who bought stolen goats in Cuddalore was brutally treated

இதில் கடந்த ஓராண்டுக்கு முன் 3 பேரும் சேர்ந்து ஆடுகளைத் திருடியுள்ளனர். இதனை அதிமுக பிரமுகர் புஷ்பநாதனிடம் விற்பனை செய்துள்ளனர். திருடப்பட்ட ஆடுகள், கடலூர் தி.மு.க பிரமுகருக்கு சொந்தமானதாகும். இது தொடர்பான புகாரில் ஆடு திருடிய நேதாஜி, அஜய், சந்தோஷ் உள்ளிட்டவர்கள் 3 பேரையும் போலீஸார் பிடித்துள்ளனர். மேலும்  ஆடு திருட பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். தங்களை ஜாமீனில் எடுக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை போலீஸாரிடம் இருந்து மீட்டு தரவும் புஷ்பநாதனிடம் உதவி கேட்டுள்ளனர்.

ஆனால் அவர் உதவி செய்யவில்லை. ஜாமீனில் வெளிவந்த இவர்கள் இது குறித்து புஷ்பநாதனிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் புஷ்பநாதனுக்கும் அந்த வாலிபர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் புஷ்பநாதனை கொலை செய்ய திட்டமிட்ட 3 பேரும் கடந்த சில தினங்களாக புஷ்பநாதன் நோட்டமிட்டு கடந்த 29ஆம் தேதி இரவு கொலை செய்தது தனிப்படை போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இத்தத்கவலறிந்து ஆத்திரமடைந்த புஷ்பநாதனின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் 3 பேரின் வீடுகளையும் சூறையாடினர். மேலும் ஜூலை 1-ஆம் தேதி புஷ்பநாதனின் இறுதி சடங்கு நடைபெறுவதையொட்டி. அப்பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் கடலூர் பகுதியில் பரபரப்பாக இருந்தது. ஆடு திருடிய சம்பவ வாக்குவதாம் கொலையில் முடிந்துள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடலூரில் அதிமுக பிரமுகர் கொலை அதிர்ச்சி அளிப்பதாகவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Next Story

ஆடு திருட்டில் முன்விரோதம்; அதிமுக நிர்வாகி கொலையில் திடுக்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Antecedent in goat theft; AIADMK official shocked by murder

                           கொலை செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி  புஷ்பநாதன்   

கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் புஷ்பநாதன் என்பவர் நேற்று இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உறவினர்கள், அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளை புஷ்பநாதனின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. முன் விரோதம் காரணமாக புஷ்பநாதனை மூன்று பேரும் சேர்ந்து கொலை செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

ஆலை காலனி பகுதியை சேர்ந்த நேதாஜி, அதே பகுதியைச் சேர்ந்த அஜய் மற்றும் சந்தோஷ் ஆகிய மூன்று பேர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மூவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவாளர்கள் என கூறப்படும் நிலையில், ஆடுகளை திருடி, அந்த பகுதியில் கசாப்பு கடை நடத்தி வந்த அதிமுக நிர்வாகி புஷ்பநாதனுக்கு விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. குறைந்த விலைக்கு ஆடுகளை தன்னுடைய கசாப்பு கடைக்காக வாங்கி வந்த புஷ்பநாதனிடம் திருடப்பட்டு வந்த ஆடுகளை தொடர்ந்து விற்று வந்தனர். இந்நிலையில் நேதாஜி, சந்தோஷ் மற்றும் அஜய் ஆகிய மூன்று பேரும் தேவனாம்பட்டினத்திற்கு காரில் சென்று திமுக பிரமுகர் ஒருவரின் வீட்டில் எட்டு ஆடுகளை திருடியுள்ளனர். இது குறித்த வழக்கில் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Antecedent in goat theft; AIADMK official shocked by murder

                            கைது செய்யப்பட்ட சந்தோஷ், அஜய், நேதாஜி 

ஆடு திருட அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்திருந்தனர். இந்நிலையில் தங்களிடமிருந்து ஆடுகளை வாங்கிய புஷ்பநாதன் தங்கள் 3 பேரையும் ஜாமீன் எடுப்பார், வாகனத்தையும் போலீசிடம் இருந்து மீட்டர் தருவார் என மூன்று பேரும் நினைத்திருந்தனர். ஆனால் புஷ்பநாதன் அவ்வாறு செய்யாததால் புஷ்பநாதனுக்கும் மூன்று இளைஞர்களுக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வந்தவர்கள் இது குறித்து புஷ்பநாதனை நேரில் சந்தித்து கேட்டுள்ளனர். இதில் தகராறு ஏற்பட்ட நிலையில் மது போதையிலிருந்த மூன்று பேரும் புஷ்பநாதனை வெட்டி கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது