Skip to main content

ஆயுதங்களுடன் குவிந்த மக்கள்... இரண்டுமுறை போலீசார் துப்பாக்கி சூடு!  

Published on 28/08/2021 | Edited on 28/08/2021

 

கடலில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்கள் பிடிப்பதால் இயற்கை வளங்கள் அழியும் என்றும், இதனால் மீன்வளம் பாதிக்கப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் எனவும் கூறி சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால் புதுச்சேரி கடல் பகுதியில் ஒருசில மீனவ கிராமத்தைச் சார்ந்த மீனவர்கள் நடுக்கடலில் சென்று சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்து வருவதாக மற்றொரு தரப்பு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், இன்று நல்லவாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் படகில் சென்று வீராம்பட்டினம் மீனவர்கள் கடற்கரை அருகே சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த வீராம்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் பைபர் படகுகளை எடுத்துக்கொண்டு கடலுக்குச் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களிடம், "சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி ஏன் மீன் பிடிக்கிறீர்கள்?" என்று கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், நல்லவாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்களுடைய பெரிய படகு மூலம் வீராம்பட்டினம் மீனவர்களின் பைபர் படகை இடித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வீராம்பட்டினம் மீனவர்கள் தங்களுடைய கிராம மீனவ மக்களுக்கு தகவல் கொடுத்தனர். 

 

இதனையடுத்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் இரும்பு, கத்தி, ராடு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கடற்கரை ஓரமாகவே நல்லவாடு மீனவ கிராமத்திற்கு சென்று அப்பகுதி மீனவர்களை தாக்க முற்பட்டனர். அப்போது, இரு கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களும் பயங்கர ஆயுதங்களுடன் கடுமையாக தாக்கிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இதனையறிந்த தவளக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீனவர்களை அமைதிப்படுத்தினர். மேலும் கலவரம் ஏற்படாமல் இருக்க வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனையடுத்து இரு கிராம மீனவர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

பின்னர் அதன் தொடர்சியாக வம்பாகீரப்பாளையம் மற்றும் வீராம்பட்டினம் மீனவ கிராமத்தினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. முகத்துவாரம் அருகே இரண்டு மீனவ கிராம மக்களும்  கத்தி, அருவாள், சுளுக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இரு கரையோரம் நின்று ஒருவருக்கு ஒருவர் கல்லால் தாக்கி கொண்டனர். இதனையடுத்து மீனவர்களை கலைந்து செல்ல எச்சரித்த போலீசார் மீண்டும் இரண்டாவது முறையாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

 

மீனவ கிராமங்களுக்கு இடையே அடுத்தடுத்து நடைபெற்ற மோதல் மற்றும் கலவரத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.