Skip to main content

வலைதள காதல்; தமிழக மருமகளான சீன பெண்!

Published on 11/04/2023 | Edited on 11/04/2023

 

chinese girl married tamil boy at cuddalore

 

சமூக வலைத்தளம் மூலம் தமிழக இளைஞர் ஒருவர் சீன பெண்ணை திருமனம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

 

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் மேற்கு வேணு கோபாலபுரத்தை சேர்ந்தவர் பாலசந்தர். இவர் சீனா மற்றும் பாங்காக் நாடுகளில்  ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் சீன நாட்டைச் சேர்ந்த யீஜியோ என்ற பெண்ணுக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு  நட்பாக மாறி நாளடைவில் இது காதலாக மாறி உள்ளது. அதன் பின்னர இருவரும் ஹிந்து முறைப்படி திருமணம் செய்து செய்ய முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து இந்த திருமணத்திற்கு இருவீட்டார் சம்மதத்துடன் கடலூரில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்காக கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தனது குடும்பத்துடன் சீனாவில் இருந்து மணமகள் யீஜியோ, கடலூருக்கு வந்தார். பின்னர் கடலூர் முதுநகரில் இவர்கள் இருவருக்கும் இந்து கலாச்சாரத்தின் படி திருமணம் நடைபெற்றது.

 

திருமணத்தின் போது மணமகன் பாலச்சந்தர் பட்டு வேட்டி மற்றும் சட்டையிலும், சீன மணமகள் யீஜியோ பட்டு சேலை மற்றும் தங்க நகைகளுடன் அணிந்து இருந்தார். மணமக்கள் இருவரும் மணவறையில் அமர்ந்து இருக்க அருகில் மங்கள இசை முழங்க இந்து முறைப்படி யாக குண்டம் அமைத்து வேத மந்திரங்கள் ஓதி மணமகன் மணமகளுக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.