Skip to main content

சாலை வசதியின்றி குழந்தையின் சடலத்தை சுமார் 10 கிலோமீட்டர் தூக்கிச் சென்ற அவலம்

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

n

 

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா, அல்லேரி மலைக் கிராமத்திற்கு உட்பட்ட அத்திமரத்து கொல்லை கிராமத்தில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி விஜி. இவரது மனைவி பிரியா. இவர்களின் 1 1/2 வயது குழந்தையான தனுஷ்கா என்ற பெண் குழந்தை நேற்று இரவு வீட்டின் முன்பு படுத்து தூங்கி கொண்டிருந்தபோது இரவு நேரம் என்பதால் அருகே உள்ள காட்டுப்பகுதியிலிருந்து பாம்பு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து படுத்து உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடித்துள்ளது.

 

குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு எழுந்து பார்த்த  பெற்றோர் பாம்பு கடித்ததை பார்த்து பதறி உள்ளனர். உடனடியாக அணைக்கட்டு பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். சாலை வசதி இல்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு செல்ல நீண்ட நேரம் ஆகியுள்ளது. அப்போது விஷம் உடல் முழுவதும் பரவி குழந்தை செல்லும் வழியிலேயே  இறந்துள்ளனர்.

 

mm

 

மேலும் தகவலறிந்த அணைக்கட்டு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கைக்குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர்.  

 

இதனையடுத்து குழந்தையின் உடலை வீட்டிற்கு எடுத்து செல்ல போதிய வசதி இல்லாமல் பாதி வழியிலேயை ஆம்புலன்ஸில் இருந்து இறக்கி விட்டுள்ளனர். இதையடுத்து சிறிது தூரம் இருசக்கர வாகனத்தில் சென்று உடலை கால்நடையாக சுமார்  10கி.மீ தூரம் மலைப்பகுதிக்கு கையால் தூக்கி சென்றுள்ளனர்.

 

மேலும் சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே கைக்குழந்தை இறந்தது என்றும், கையாலே பெற்றோர்கள் தூக்கிச் சென்றது  அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உரிய சாலை வசதி ஏற்படுத்தித் தர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

சேறும், சகதியுமான சாலை; சீரமைக்க வலியுறுத்தி நாற்று நட்டு போராட்டம்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

People struggle to repair the mud and muddy road

 

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 48வது வார்டு சின்ன அல்லாபுரம் அம்பேத்கர் நகர், கே.கே. நகர், பனந்தோப்பு ஆகிய பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மாநகரில் உள்ள இந்த குடியிருப்புப் பகுதியில் தெரு விளக்கு, சாலை வசதி, மழைநீா் வடிகால் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், இதுதொடா்பாக பலமுறை வார்டு கவுன்சிலர்களுக்கும், மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையருக்கும் இப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் அவர்கள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

 

இந்நிலையில், கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால் குடியிருப்புக்குச் செல்லும் அனைத்துச் சாலைகளும் சேறும் சகதியுமாகவும், குண்டும் குழியுமாகவும் மாறி ஆங்காங்கே குளம் போல் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குவதும், நடந்து செல்லும் பலரும் சாலையில் வழுக்கி விழுந்து காயமடைவதும் எனத் தொடர்கதையாக ஆகிறது.

 

இதனால், ஆத்திரமடைந்த இப்பகுதி பெண்கள், ஆண்கள் என 30க்கும் மேற்பட்டவர்கள் முக்கிய சாலையில் சேறும் சகதியுமான இடத்தில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விரைந்து சாலை அமைத்துத் தரும்படி அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

பக்கா ப்ளான்; ஆம்புலன்சை வைத்து அலப்பறை - கூண்டோடு தூக்கிய போலீஸ்

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

Police caught 10 youths who were involved in a bike race with an ambulance

 

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில் இருந்து தென்காசி நோக்கி பைக் ரேசர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் அதிவேகமாக திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள்களை இயக்கிக் கொண்டு வருவதாக தென்காசி மாவட்ட எல்லையான, சிவகிரி போலீசாரிடம் இருந்து தென்காசி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில், தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி தலைமையிலான போலீசார் தென்காசி அருகே உள்ள குத்துக்கல் வலசை பகுதியில் காத்துக் கொண்டிருந்தனர். 

 

அப்பொழுது, அதிவேகமாக ஆம்புலன்ஸ் ஒன்று திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த நிலையில், அதனை மறித்த போக்குவரத்து போலீசார் தொடர்ந்து, ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை மறித்து விசாரணை நடத்திய போது அதில் வந்த 10 இளைஞர்கள் அனைவரும் சிவகாசி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் குற்றாலத்திற்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு, முன்னதாக சிவகாசியில் இருந்து குற்றாலத்திற்கு மோட்டார் சைக்கிள் ரேஸ் செல்லலாம் என திட்டமிட்டுள்ளனர். அப்பொழுது, திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையானது வாகன நெரிசல் மிகுந்த சாலை என்பதால் ரேஸ் செல்வது கடினம் என யோசித்த அந்த சில்லுவண்டுகள் விபரீதமாக திட்டமிட்டுள்ளனர். 

 

அதன்படி, ஒரு தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி குற்றாலம் செல்ல வேண்டும் என ஆம்புலன்ஸ் டிரைவரிடம் சொல்லியும், ஆம்புலன்சை சைரன் போட்டவாறு சிவகாசியில் இருந்து குற்றாலம் நோக்கி செல்ல வைத்து, அதன் பின்னால் இளைஞர்களான சில்லுவண்டுகள் அனைவரும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து சிவகிரி போலீசார் உடனே சம்பவம் குறித்து தென்காசி போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், கொத்தாக தென்காசி போக்குவரத்து போலீசார் அந்த சில்லுவண்டுகள் அனைவரையும் மடக்கி அவர்கள் ஓட்டி வந்த வாகனங்கள் மற்றும் ஆம்புலன்சை பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மேலும், மோட்டார் சைக்கிள் ரேஸ் செல்ல திட்டமிட்ட இளைஞர்கள் சட்டவிரோதமாக, அவசர சிகிச்சைக்காக பயன்படுத்தக்கூடிய ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபட்ட இளைஞர்கள், போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்துள்ளது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்