Skip to main content

குழந்தை திருமணங்கள்! இரண்டு தாய்மாமன்கள் மீது போக்சோ!

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

Child marriages two people under pocso act

 

சேலம் அருகே, 18 வயது நிறைவடையாத சிறுமிகளைத் திருணம் செய்துகொண்டு தாயாக்கிய அவர்களின் தாய் மாமன்கள் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து தேடிவருகின்றனர்.

 

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகே உள்ள சூரப்பள்ளியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, கர்ப்பமான நிலையில் சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு நவ. 18ஆம் தேதி சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், 18 வயது பூர்த்தி அடையாத சிறுமி கர்ப்பமுற்று இருந்ததால், ஓமலூர் மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். ஆய்வாளர் இந்திரா உள்ளிட்ட காவலர்கள் அந்தச் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

 

விசாரணையில் அந்தச் சிறுமி, ''சூரப்பள்ளியில் வசிக்கும் என் தாய் மாமன் மூர்த்தி என்பவர் என்னிடம் நெருங்கிப் பழகினார். கடந்த ஜூலை மாதம் பெற்றோருக்குத் தெரியாமல் ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டோம். அதன்பின்னர் ஒன்றாக குடும்பம் நடத்தியதில் கர்ப்பம் அடைந்தேன்'' என்று கூறியுள்ளார். 

 

எனினும், 18 வயது பூர்த்தி அடையாத சிறுமியைத் திருமணம் செய்துகொள்வது சட்டப்படி குற்றம் என்பதால், அந்தச் சிறுமியின் கணவர் மூர்த்தி மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர். மேலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தடுப்பு சட்டமான போக்சோவின் கீழும் வழக்குப் பதிவுசெய்து, அவரை தேடிவருகின்றனர். 

 

மற்றொரு சம்பவம்: 

 

ஜலகண்டாபுரம் அருகே உள்ள சூரப்பள்ளி, பனங்காட்டூரைச் சேர்ந்த 17 வயதான பிளஸ் டூ மாணவி ஒருவர், நிறைமாத கர்ப்பிணியாக கடந்த இரு நாட்களுக்கு முன்பு மேட்டூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. அவரும் 18 வயது நிறைவடைவதற்குள் திருமணம் செய்துகொண்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்த ஓமலூர் மகளிர் காவல் நிலைய காவல்துறையினர், இந்தச் சிறுமியின் கணவரான கமலக்கண்ணன் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

 

இந்தப் புகாரில் சிக்கியுள்ள கமலக்கண்ணன், அவருடைய மனைவிக்கு தாய்மாமன் உறவுமுறை ஆகிறது. இருவரும் காதலித்துவந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துகொண்டுள்ளனர். அதன்பிறகு சிறுமி கர்ப்பமடைந்திருப்பது தெரியவந்தது. தலைமறைவாகிவிட்ட கமலக்கண்ணனையும் காவல்துறையினர் தேடிவருகின்றனர். 

 

ஓமலூர், தாரமங்கலம், ஜலகண்டாபுரம், மேட்டூர், ஆத்தூர் சுற்றுவட்டாரங்களில் பரவலாக குழந்தைத் திருமணங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. அதேபோல்  குழந்தைகளுக்கு எதிரான குறிப்பாக, பெண் குழந்தைகள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் கணிசமாக அதிரித்துள்ளன. இதுகுறித்து அரசும், தொண்டு நிறுவனங்களும் பொதுமக்களிடமும், பள்ளிகளிலும் தொடர்ந்து விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.