Skip to main content

உடல் உபாதைக்குள்ளான குழந்தை! ஹோட்டல் ஊழியர்களின் அடாவடி பேச்சு! 

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

A child affected  The rude speech of the hotel staff!

 

திருவண்ணாமலை நகரம் மத்திய பேருந்து நிலையம் எதிரே ஒரு பிரபல ஹோட்டல் உள்ளது. அந்த ஹோட்டலில் ஸ்வீட்ஸ் அன்ட் பேக்கரியும் உள்ளது. செப்டம்பர் 26ஆம் தேதி திருவண்ணாமலை அண்ணா நகரைச் சேர்ந்த ஆதாம் என்பவர் தனது இரண்டாவது குழந்தை ஷப்பியாவுக்கு 3வது பிறந்தநாளை முன்னிட்டு ஹோட்டல் பேக்கரியில் பிறந்தநாள் ஐஸ் கேக் ஆர்டர் தந்துள்ளார்.

 

இரவு 7 மணியளவில் ஃபர்த்டே கேக் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார். உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் குவிந்திருக்க பிறந்தநாள் கேக்கை குழந்தை கட் செய்துள்ளது. அந்த கேக்கை குழந்தைக்கும், தனது மூத்த மகன் 5 வயது இர்பான்க்கு பெற்றோர்கள் ஊட்டிவிட்டுள்ளனர். கேக்கை சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மூன்று வயது குழந்தை வாந்தி எடுத்துள்ளது, வயிற்று போக்கும் ஏற்பட்டுள்ளது. கேக் சாப்பிட்ட உறவினர்கள் கேக் நல்லாயில்லப்பா, நாற்றம் அடிக்குது எனச்சொல்ல அவர் கேக் வாங்கி சாப்பிட்டும், முகர்ந்து பார்த்துள்ளார், கேக் கெட்டுப்போய் இருந்துள்ளதாக முடிவு செய்துக்கொண்டு அந்த கேக்கை அப்படியே எடுத்துக்கொண்டு தனது நண்பர்கள் இருவருடன் ஹோட்டலுக்கு வந்து என்னங்க கெட்டுப்போன கேக் தந்திருக்கிங்க, குழந்தை வாந்தி எடுத்துடுச்சி எனக்கேட்டுள்ளார். அங்கிருந்த ஊழியர்கள், கேக் வாங்கிக்கிட்டு போனதுக்கு பிறகு நாங்க பொறுப்பில்ல எனச் சொல்லியுள்ளார்கள். இதில் கடுப்பாகி சத்தம் போட்டுள்ளார்.

 

இப்போ என்ன குழந்தைக்கு, வாந்திதானே என ஊழியர் ஒருவர் கேட்டதாக கூறப்படுகிறது. அதைக்கேட்டு கோபமானவர், தனது உறவினர்கள், நண்பர்களுக்கு தகவல் தந்துள்ளார். அண்ணாநகர் பகுதியில் இருந்து 200க்கும் அதிகமானவர்கள் இரவு 9 மணிக்கு திரண்டுவந்து ஹோட்டலை முற்றுகையிட்டனர். இதனால் மத்திய பேருந்து நிலையம் பகுதியே பரபரப்பானது. ஹோட்டல் வாசலில் தனது மனைவியுடன் அமர்ந்து நியாயம் கேட்டு கோஷங்கள் எழுப்பினர் ஆதாம்.

 

தகவலறிந்து வருவாய் கோட்டாச்சியர், தாசில்தார், துணை காவல் கண்காணிப்பாளர் என அதிகாரிகள் வந்தனர். காவலர்கள் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வரவைத்து அந்த ஐஸ் கேக் சோதனைக்காக மாதிரி எடுத்துக்கொண்டவர்கள், கேக் செய்யும் உணவு பொருட்களையும் பரிசோதனைக்காக எடுத்துக்கொண்டுள்ளனர் அதிகாரிகள். இதுக்குறித்து புகார் தந்தால் விசாரணை நடத்துகிறோம், டெஸ்ட் ரிசல்ட் வந்தபிறகு நடவடிக்கை எடுக்கிறோம் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சொன்னதன் அடிப்படையில் ஹோட்டலை முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர்.

 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் பிரபல சைவ ஹோட்டலில் சாம்பாரில் எலி தலை இருந்து அந்த ஹோட்டலுக்கு, உணவு பாதுகாப்புத்துறை சீல் வைத்தது. அதற்கு முன்பு அதே ஆரணியில் இரண்டு பிரபல ஹோட்டல்களில் கெட்டுப்போன இறைச்சியில் சமைத்து தந்ததை சாப்பிட்ட ஒருபள்ளி மாணவன் பலியானான். பலர் உடல் உபாதைக்கு ஆளாகினர். இப்போது திருவண்ணாமலை நகரத்திலும் இது நடந்துள்ளது.

 

தினமும் ஆயிரக்கணக்கான வெளிமாவட்ட, வெளிமாநில பக்தர்கள் சுற்றுலா பயணிகளாக திருவண்ணாமலை நகரத்துக்கு வருகின்றனர். அப்படிப்பட்ட நகரத்தில் கெட்டுப்போன உணவு பொருள் விற்கிறார்கள், உணவு விலை அதிகம், சுத்தம்மில்லாத இடத்தில் உணவு சமைப்பது என திருவண்ணாமலை ஹோட்டல்கள் மீதும் குற்றச்சாட்டுகள் உண்டு. இவைகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டுக்கொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.