Skip to main content

ஆத்துப்பாக்கத்திற்கு நேரடி விசிட் அடித்த தலைமைச் செயலாளர்...!

Published on 14/08/2022 | Edited on 14/08/2022

 

The Chief Secretary made a direct visit to Attuppakkam...!

 

திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு முன்னிலையில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் தேசியக் கொடியேற்றினார்.

 

அண்மையில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டிருந்த அறிவிப்பில், 'ஒரு சில ஊராட்சிகளில், சாதிய பாகுபாடுகள் காரணமாக, தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரச்சனைகளோ, அவமதிக்கும் செயல்களோ நடைபெறலாம் என தகவல்கள் பெறப்பட்டுள்ளது. தீண்டாமையை எந்த வடிவத்திலும் செயல்படுத்துவது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ளது. பட்டியல் இனத்தோர், பழங்குடியின ஊராட்சித் தலைவர்கள் தங்கள் கடமைகளைச் செய்வதை அவமதித்தால், அது தண்டனைக்குரிய குற்றமாகும். இதனை கருத்தில் கொண்டு எவ்வித சாதிய பாகுபாடுமின்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளின் அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆத்துப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஊராட்சியில் செய்யப்படுகின்ற வளர்ச்சிப் பணிகள் குறித்து  அலுவலகத்தின் உள்ளே சென்று பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம்மாளை அவரது இருக்கையில் அமர வைத்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஆத்துப்பாக்கம் ஊராட்சியின் துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்தார். இந்த ஊராட்சிக்கு என்ன தேவைப்படுகிறது என்பது குறித்து எல்லாம் விரிவாக அவர்களிடம் பேசினார். 

 

அதன் பிறகு தனது முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம்மாளை தேசியக் கொடியை ஏற்ற வைத்த மரியாதை செய்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் பட்டியல் தலைவர் தேசியக்கொடி ஏற்றக்கூடாது என சர்ச்சை எழுந்த நிலையில், இறையன்பு நேரடி விசிட் அடித்து ஊராட்சி பிரதிநிதிகள் மட்டுமே கொடி ஏற்ற வேண்டும் என்பதை உறுதி செய்து செய்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக மாநில நிர்வாகி வீட்டில் பறக்கும்படை சோதனை

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Air force raids BJP state executive's house


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. அதேநேரம் தேர்தல் பறக்கும் படை பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக மாநில நிர்வாகி ஒருவர் வீட்டில் பறக்கும் படை திடீர் சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஓபிசி அணி மாநிலச் செயலாளர் கே.ஆர்.வெங்கடேசன் என்பவர் வீட்டில் பறக்கும் படையானது சோதனை நடத்தி வருகிறது. திருவள்ளூரில் பாஜக சார்பில் பணம் பட்டுவாடா செய்வதற்காக நிர்வாகி வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து,  பாடிய நல்லூரில் உள்ள வெங்கடேஷ் வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா; பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
pay for campaigning Case filed against BJP executive

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகையை சூழலில் திருவள்ளூரில் உள்ள ஆரம்பாக்கத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு, ஐந்து பேருக்கு 500 ரூபாய் என்ற ரீதியில் பணம் விநியோகம் செய்தது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியது. திருவள்ளூர் பாஜக வேட்பாளர் பொன். பாலகணபதியை ஆதரித்து கும்மிடிப்பூண்டி அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட பொழுது பாஜக கொடியை ஏந்திச் செல்லும் பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா 100 ரூபாய் என ஐந்து பேருக்கு மொத்தமாக 500 ரூபாய் கொடுக்கப்படும் காட்சி இணையத்தில் வைரலானது.

சுமார் 30 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு 500 ரூபாய் நோட்டுகளை பாஜகவினர் கொடுக்கும் அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இது குறித்து கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சம்பத் ஆரம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் நொச்சிக்குப்ப்பத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.