ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3வது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இன்று (ஜூன் 18ம் தேதி) தந்தையர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது.
இதனை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனதுட்விட்டர்பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அந்தப் பதிவில்:
“உங்களால் கருவானேன்.
உங்களால் செதுக்கப்பட்டேன்.
நீங்கள் காட்டிய பாதையிலேயே பயணிக்கிறேன்.
உம்மை மனதில் நினைத்தே நித்தமும் செயல்படுகிறேன்.
நீங்கள் செய்ய எண்ணியதைச் செய்து காட்டுவேன்.” என்று தெரிவித்துள்ளார்.