Skip to main content

முதல்வர் உத்தரவு; மௌனம் காக்கும் கமிட்டி; மன உளைச்சலில் மாநகர போலீசார்!

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

Chief Minister's order.. Committee to keep silence..  police in distress..!

 

சென்னை மாநகர காவல் ஆணையரகம் கட்டுப்பாட்டின் கீழ் 155 காவல் நிலையங்கள் இயங்கி வந்தன. சென்னை பெருநகரின் வளர்ச்சியின் காரணமாக, சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் , காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் தொழில் புரட்சியின் காரணமாக, குடியிருப்புகள் அதிகரித்துக் கொண்டே உள்ளன. இதனால் சென்னை மாநகர காவல்துறைக்கு பணிச் சுமை மிகவும் அதிகமாக இருந்து வந்தது. 

 

இது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதற்கான தீர்வாக கடந்த 13 ஆம் தேதி செப்டம்பர் 2021 அன்று சட்டமன்ற கூட்டத்தில் காவல்துறை மானிய கோரிக்கையின் போது, சென்னை புறநகர் பகுதியில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்தும் வகையில், தாம்பரம் மற்றும் ஆவடி என இரண்டு காவல்துறை ஆணையரகம் புதிதாக துவங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி அறிவித்த மூன்றே மாதங்களில் அதை நடைமுறைப்படுத்தும் வகையில், 2022 ஜனவரி 1 ஆம் தேதி,  20 காவல் நிலையங்களை கொண்ட தாம்பரம் ஆணையரகம் அமைத்து முதல் கமிஷ்னராக கூடுதல் டி.ஜி.பி. ரவி ஐ.பி.எஸ்ஸை நியமித்தார். மேலும் 25 காவல் நிலையங்களை உள்ளடக்கிய ஆவடி காவல் ஆணையரகம் அமைத்து அதன் கமிஷ்னராக கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் ரத்தோர்ராய் ஐ.பி.எஸ்ஸை நியமித்தார். 

 

தற்போது சென்னை மாநகர காவல் ஆணையரகத்தின் கீழ் 103 காவல் நிலையங்கள் உள்ளடக்கி செயல்பட்டு வருகின்றன. இந்த மூன்று மாநகர காவல் எல்லையில் பணி செய்து வந்த உதவி ஆய்வாளர்கள் முதல் காவலர் வரை பல்வேறு காரணங்களுக்காக பணியிட மாற்றம் கேட்டிருந்தனர். 

 

Chief Minister's order.. Committee to keep silence..  police in distress..!

 

இந்த நிலையில் அவர்கள் கோரிக்கையை ஏற்று முதல்வர் மு.க. ஸ்டாலினின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கமிஷ்னர் ஐ.ஜி லோகநாதன் ஐ.பி.எஸ். உள்ளடக்கிய மூன்று பேர் சேர்ந்த கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால் அந்த கமிட்டி அமைக்கப்பட்டதிலிருந்து இதுவரை 500க்கும் மேற்பட்ட போலீசார் பணியிடம் மாற்றம் கேட்டிருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது.  இந்த மூன்று மாநகர காவல் எல்லை பிரிக்கும்போது 500க்கும் மேற்பட்ட போலீசார் பல்வேறு காரணங்களுக்காக பணியிட மாற்றம் கேட்டு மனு செய்திருந்தனர்.  

 

ஆனால், இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி செயல்படாமலே இருந்து வருகிறது.  இதனால் பணியிட மாறுதல் கேட்டிருந்த போலீசார் மன அழுத்தத்தில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையைச் சேர்ந்த சில போலீசார், இந்த பணியிட மாற்றம் தொடர்பாக அமைக்கப்பட்ட கமிட்டி பற்றி முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

 

Chief Minister's order.. Committee to keep silence..  police in distress..!

 

அதன்படி கடந்த டிசம்பர் மாதம் இது தொடர்பாக சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியதில் குறைதீர்ப்பு முகாம் அமைத்து மனுக்கள் பெறப்பட்டது. இருந்தபோதிலும் இதுவரை பணியிட மாற்றம் கேட்ட போலீசாருக்கு எந்த பணியிட மாற்றமும் செய்யப்படவில்லை. 


இது தொடர்பாக இந்த கமிட்டி தலைவரான சென்னை மாநகர காவல் தலைமையக  கூடுதல் போலீஸ் கமிஷ்னரான ஐ.ஜி.  லோகநாதன் ஐ.பி.எஸ்.-ஐ ஃபோனில் தொடர்பு கொண்டோம். அவர் தொடர்பை எடுக்கவில்லை. தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவையும் தொடர்பு கொண்டோம் அவரும் பதில் அளிக்கவில்லை. இது தொடர்பாக குறுஞ்செய்தி அனுப்பியும் பதில் தரவில்லை. 


ஐ.ஜி.லோகநாதன் மற்றும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோர் இதுகுறித்து பதில் தரும் பட்சத்தில் அதுவும் பதிவேற்றப்படும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
India alliance will take action to increase reservation CM MK Stalin

டெல்லியில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதில், “இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவருக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிசி மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்பது நீதிக்கட்சி காலத்திலிருந்தே இருக்கும் தமிழ்நாட்டின் மரபு ஆகும். சம்ருத்த பாரத் அறக்கட்டளையின் மாநாட்டில் சமூக நீதி பற்றிய எனது செய்தியை எங்கள் கட்சியின் எம்.பி.யான வில்சன் மூலம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உள்ளடக்கிய இந்தியாவை நோக்கி நமது பயணத்தைத் தொடர்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.