Skip to main content

முதல்வர் உத்தரவு; மௌனம் காக்கும் கமிட்டி; மன உளைச்சலில் மாநகர போலீசார்!

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

Chief Minister's order.. Committee to keep silence..  police in distress..!

 

சென்னை மாநகர காவல் ஆணையரகம் கட்டுப்பாட்டின் கீழ் 155 காவல் நிலையங்கள் இயங்கி வந்தன. சென்னை பெருநகரின் வளர்ச்சியின் காரணமாக, சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் , காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் தொழில் புரட்சியின் காரணமாக, குடியிருப்புகள் அதிகரித்துக் கொண்டே உள்ளன. இதனால் சென்னை மாநகர காவல்துறைக்கு பணிச் சுமை மிகவும் அதிகமாக இருந்து வந்தது. 

 

இது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதற்கான தீர்வாக கடந்த 13 ஆம் தேதி செப்டம்பர் 2021 அன்று சட்டமன்ற கூட்டத்தில் காவல்துறை மானிய கோரிக்கையின் போது, சென்னை புறநகர் பகுதியில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்தும் வகையில், தாம்பரம் மற்றும் ஆவடி என இரண்டு காவல்துறை ஆணையரகம் புதிதாக துவங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி அறிவித்த மூன்றே மாதங்களில் அதை நடைமுறைப்படுத்தும் வகையில், 2022 ஜனவரி 1 ஆம் தேதி,  20 காவல் நிலையங்களை கொண்ட தாம்பரம் ஆணையரகம் அமைத்து முதல் கமிஷ்னராக கூடுதல் டி.ஜி.பி. ரவி ஐ.பி.எஸ்ஸை நியமித்தார். மேலும் 25 காவல் நிலையங்களை உள்ளடக்கிய ஆவடி காவல் ஆணையரகம் அமைத்து அதன் கமிஷ்னராக கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் ரத்தோர்ராய் ஐ.பி.எஸ்ஸை நியமித்தார். 

 

தற்போது சென்னை மாநகர காவல் ஆணையரகத்தின் கீழ் 103 காவல் நிலையங்கள் உள்ளடக்கி செயல்பட்டு வருகின்றன. இந்த மூன்று மாநகர காவல் எல்லையில் பணி செய்து வந்த உதவி ஆய்வாளர்கள் முதல் காவலர் வரை பல்வேறு காரணங்களுக்காக பணியிட மாற்றம் கேட்டிருந்தனர். 

 

Chief Minister's order.. Committee to keep silence..  police in distress..!

 

இந்த நிலையில் அவர்கள் கோரிக்கையை ஏற்று முதல்வர் மு.க. ஸ்டாலினின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கமிஷ்னர் ஐ.ஜி லோகநாதன் ஐ.பி.எஸ். உள்ளடக்கிய மூன்று பேர் சேர்ந்த கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால் அந்த கமிட்டி அமைக்கப்பட்டதிலிருந்து இதுவரை 500க்கும் மேற்பட்ட போலீசார் பணியிடம் மாற்றம் கேட்டிருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது.  இந்த மூன்று மாநகர காவல் எல்லை பிரிக்கும்போது 500க்கும் மேற்பட்ட போலீசார் பல்வேறு காரணங்களுக்காக பணியிட மாற்றம் கேட்டு மனு செய்திருந்தனர்.  

 

ஆனால், இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி செயல்படாமலே இருந்து வருகிறது.  இதனால் பணியிட மாறுதல் கேட்டிருந்த போலீசார் மன அழுத்தத்தில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையைச் சேர்ந்த சில போலீசார், இந்த பணியிட மாற்றம் தொடர்பாக அமைக்கப்பட்ட கமிட்டி பற்றி முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

 

Chief Minister's order.. Committee to keep silence..  police in distress..!

 

அதன்படி கடந்த டிசம்பர் மாதம் இது தொடர்பாக சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியதில் குறைதீர்ப்பு முகாம் அமைத்து மனுக்கள் பெறப்பட்டது. இருந்தபோதிலும் இதுவரை பணியிட மாற்றம் கேட்ட போலீசாருக்கு எந்த பணியிட மாற்றமும் செய்யப்படவில்லை. 


இது தொடர்பாக இந்த கமிட்டி தலைவரான சென்னை மாநகர காவல் தலைமையக  கூடுதல் போலீஸ் கமிஷ்னரான ஐ.ஜி.  லோகநாதன் ஐ.பி.எஸ்.-ஐ ஃபோனில் தொடர்பு கொண்டோம். அவர் தொடர்பை எடுக்கவில்லை. தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவையும் தொடர்பு கொண்டோம் அவரும் பதில் அளிக்கவில்லை. இது தொடர்பாக குறுஞ்செய்தி அனுப்பியும் பதில் தரவில்லை. 


ஐ.ஜி.லோகநாதன் மற்றும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோர் இதுகுறித்து பதில் தரும் பட்சத்தில் அதுவும் பதிவேற்றப்படும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோடை வெப்பம்; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Tamil Nadu Chief Minister M. K. Stalin's instructions for summer heat

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்க்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, “வெப்ப நிலை அதிகரிக்கும். வெப்ப அலை வீசும், என்பது போன்ற செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பொதுவாக கோடை காலம் என்பது வெப்பம் அதிகம் உள்ள மாதங்களாக இருந்தாலும், நாளுக்கு நாள் வெப்ப அளவு அதிகமாகி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அதனால்தான் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் அரசுத் துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன். இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மருத்துவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆலோசனையை அரசு அதிகாரிகள் கேட்டுத் தெரிந்து கொண்டதன் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கையை வெளியிடுவது மிக மிக அவசியமானதாகக் கருதுகிறேன். வெப்பநிலை அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள். கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படலாம். இவர்களை மிகக் கவனமாக பாதுக்காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது. உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை தொடர்ந்து பருகவேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சைப் பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

பயணத்தின்போது துணி, துண்டு, தொப்பி குடிநீர் எடுத்துச் அணிந்து செல்லவேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான. தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வயது முதிர்ந்தவர்கள் நடந்து செல்லும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக நிழலுக்குச்செல்லவேண்டும். மேலும், தண்ணீர், எலுமிச்சைப் பழச்சாறு, ஓ.ஆர்.எஸ். பருக வேண்டும். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கவும். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். சிறுபிரச்சனை என்றாலும் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அனைத்து பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

அதிகரித்துவரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள். திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்டதூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்