Skip to main content

“விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறார் முதல்வர்” - அமைச்சர் சக்கரபாணி பேச்சு!!

Published on 25/10/2021 | Edited on 25/10/2021

 

Chief Minister is implementing various projects for farmers

 

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் தொகுதியில் இருக்கும் தொப்பம்பட்டியில் மாநில விரிவாக்கத் திட்டத்திற்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஒருங்கிணைப்பை  வலுப்படுத்தும் உழவர் விழா நடைபெற்றது. இந்த விழாவில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு  நலத்திட்ட உதவிகளான உரம் மற்றும் தென்னை கன்றுகளை வழங்கினார். அதன்பின் விழாவில் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவருகிறார்.

 

விவசாயிகளுக்காக வேளாண்மைத்துறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், விவசாயிகள் நலன் கருதி பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து செயல்படுத்திவருகிறார். அதன்படி உழவர் விழா நடத்தப்படுகிறது. தொப்பம்பட்டி வட்டாரத்தில் 2021 - 2022ஆம் ஆண்டு அட்மா திட்டத்தின் கீழ் வறட்சியான பகுதியில் நீர் ஆதாரத்தைப் பெருக்கி விவசாய பரப்பு அதிகரிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மழை காலங்களில் உபரிநீர் வீணாகி கடலில் கலப்பதை தடுத்து சேமிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக 1,650 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

Chief Minister is implementing various projects for farmers

 

மேலும் மாவட்டத்தின் சண்முகநதி, நல்லதங்காள், நங்காஞ்சிறு  பகுதியில் பத்து தடுப்பணைகள் அமைக்கப்பட உள்ளன. பரப்பலாறு அணை தூர்வார அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பரப்பலாறு முதல் நங்காஞ்சி ஆறு வரை நீர்வழித் தடத்தில் சிமெண்ட் சாலை அமைக்க 40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் வாகரையில் 25  ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோள மையம் அமைக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொண்டுவந்தார். அந்த வகையில் மு.க. ஸ்டாலின் விவசாயிகள் நலனுக்காக அதிக அளவில் முருங்கை சாகுபடி நடைபெறும் 7 மாவட்டங்களை ஒருங்கிணைந்து ஏற்றுமதி மண்டலமாக அறிவித்துள்ளார்.

 

மேலும், நெல்லுக்கு ஆதார விலை, கரும்புக்கு ஊக்கத் தொகை ஆகியவற்றையும் அறிவித்துள்ளார். பழனி, ஈரோடு புதிய ரயில் பாதை, பழனியிலிருந்து திண்டுக்கல் திருச்சி வழியாக இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் நடவடிக்கையால் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு நோய்தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டு உள்ளன. முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது வைத்த நம்பிக்கையால் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் அதிக வெற்றியைத் தந்துள்ளனர்” என்று கூறினார். இந்த விழாவில் வேளாண்மைத் துறை அதிகாரிகள், விவசாயிகள், அரசியல்வாதிகள் என பலரும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.