Skip to main content

தீட்சிதர்கள் குடும்பத்திற்கு ஒரு சட்டம், பொதுமக்களுக்கு ஒரு சட்டமா? - பக்தர்கள் எதிர்ப்பு! 

Published on 11/12/2021 | Edited on 11/12/2021

 

In chidambaram temple devotees are struggle to get inside

 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரும் 19ஆம் தேதி ஆருத்ரா தேர் திருவிழா, 20ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் வெளிநாடுகளிலிருந்தும் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சிவபக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். ஆண்டுக்கு இருமுறை ஆணி திருமஞ்சனம் மற்றும் ஆருத்ரா தரிசன விழா என நடைபெறும் இந்த திருவிழா காலங்களில் கோவிலில் திருவிழா விமர்சையாக இருக்கும். இதனை முன்னிட்டு பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். 

 

இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழாவிற்காக இன்று (11.12.2021) கொடி ஏற்றும் நிகழ்ச்சி கோவில் கருவறை முன் உள்ள கொடி மரத்தில் நடைபெற்றது. இதில் தீட்சிதர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். கரோனா கட்டுப்பாடு உள்ளதால் கோவிலுக்கு உள்ளே பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் சார்பில் திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

 

In chidambaram temple devotees are struggle to get inside

 

இதனைத் தொடர்ந்து டிச 11ஆம் தேதி சனிக்கிழமை (இன்று) அதிகாலை முதல் பக்தர்களைக் கோவிலுக்கு உள்ளே விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ஆனால் இதற்கு மாறாக, நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குடும்பத்தினர் அனைவரும் கோவிலுக்குள் சென்ற வண்ணம் இருந்தனர். இதனைப் பார்த்த வெளியில் நின்றிருந்த பக்தர்கள், தீட்சிதர் குடும்பத்திற்கு ஒரு சட்டம்? பக்தர்களுக்கு ஒரு சட்டமா? என வாக்குவாதத்தில் ஈடுபட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் காவல்துறையினர் தீட்சிதர் குடும்பத்தைக் கோவிலுக்கு உள்ளே செல்வதைத் தடுக்க முடியாத நிலையில் வெளியில் நின்றிருந்த பக்தர்களையும் வேறு வழியின்றி உள்ளே அனுப்பினர்.  

 

இதுவரை பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் கோவிலின் உள்ளே பக்தர்களின் கூட்டம் குறைவாகவே இருந்தது. இதேபோல் பொதுமக்களுக்கும், பக்கதர்களுக்கு ஆருத்ரா தரிசன விழாவிற்கு அனுமதி உள்ளதா? இல்லையா? என சரியான விபரம் இல்லை என பக்தர்கள் மத்தியில் கூறப்படுகிறது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி கோவிலுக்கு உள்ளே யார் பொதுமக்களை அனுமதித்தது என மாவட்ட நிர்வாகம் மற்றும் தனிப்படையினர் கோவில் விசாரணையில் ஈடுபட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருவண்ணாமலையில் குவிந்த ஜப்பான் பக்தர்கள்

Published on 07/01/2024 | Edited on 07/01/2024

 

திருவண்ணாமலை நகரில் கிரிவலப் பாதையில் பிரம்மாண்டமான பந்தலில் உலக நன்மைக்காக எனச் சொல்லி ஒரு பெரும் யாகம் நடைபெற்றது. இரண்டு நாள் நடைபெற்ற இந்த யாகத்தில் திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஜப்பானில் கோலிவுட் நடிகர் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் இருப்பது தமிழ்நாட்டு திரை ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் ஜப்பானில் சிவ பக்தர்கள் இருப்பதும் அவர்கள் திருவண்ணாமலையில் நடைபெற்ற யாகத்தில் வந்து கலந்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலை மக்களிடத்தில்.

ஜப்பானில் குடும்பத்தோடு வாழும் தொழிலதிபர் தியாக குறிஞ்சி செல்வன், அவரது மனைவி மருத்துவர் விஜயலட்சுமி இருவரும் சிதம்பரம் தீட்சதரர்களை சென்னையைச் சேர்ந்த அகத்தியர் துரைசாமி சுப்புரத்தினம் மூலம் அழைத்து வந்து திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் இந்த மகா யாகத்தை நடத்தினர்.

உலக நன்மைக்காக தொடர்ந்து 15 ஆண்டுகள் தமிழ்நாட்டின் வெவ்வேறு ஊர்களில் இந்த யாகத்தை பிரமாண்டமாக நடத்தி வருகிறார்கள். அதன்படி இந்த ஆண்டு திருவண்ணாமலையில் நடத்தியுள்ளனர். இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகத்தில் ஜப்பான் நாட்டிலிருந்து குருநாதர் மசாகி அவயமா தலைமையில் 100 க்கும் மேற்பட்ட ஜப்பானிய சிவபக்தர்களான அண்ணாமலையார் பக்தர்கள் இதற்காகவே வந்து கலந்து கொண்டதை உள்ளூர் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்

திரைத்துறையை சேர்ந்த நடிகர்கள் மோகன், சூரி, ஜீவா, ஸ்ரீகாந்த், கணேஷ், ஆர்த்தி கணேஷ், நடிகைகள் ஸ்ரீதிவ்யா, ஸ்ரீ ரம்யா, ஜனனி ஐயர், விஜய் டிவி புகழ் அமுதவாணன் பாடகி தான்யஸ்ரீ, பாடகி அனிதா, பிரபல வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் இந்த யாகத்தில் கலந்து கொண்டார்கள்.

இரண்டு நாட்கள் யாகத்தில்  கலந்து கொண்டவர்களுக்கு உணவு வழங்கி பிரமாண்டப்படுத்தியிருந்தனர். ஏற்கனவே ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா வை சேர்ந்த சிவபக்தர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையாரை வணங்கவும், கிரிவலம் வர குவிந்து வரும் நிலையில் ஜப்பானை சேர்ந்தவர்கள் அண்ணாமலையார் பக்தர்களாக திருவண்ணாமலை வந்திருந்ததை அங்கு வந்த பொதுமக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Next Story

தவிக்கும் ஐயப்ப பக்தர்கள்; பினராயி விஜயன் அவசர ஆலோசனை

Published on 13/12/2023 | Edited on 14/12/2023
People who are suffering in Sabari Hill; Pinarayi Vijayan advises

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை செல்வது வழக்கம். இந்த வருடம் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் அதிகரித்து வருவதால் பக்தர்கள் பலர் சன்னிதானம் செல்லாமலேயே பாதி வழியில் திரும்பி வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில் நாள்தோறும் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்தபடி கோவிலுக்கு சென்று வருகின்றனர். நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 85 ஆயிரம் பேர் தரிசனம் செய்து வரும் நிலையில், நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. வாகனங்களில் வரும் பக்தர்கள் எரிமேலி உள்ளிட்ட சில பகுதிகளில் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தேவஸ்தானம் தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்க வேண்டும் என முடிவு செய்தும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை இருப்பதால் இந்த சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் காவலர்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்கும் படி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டும் தேவஸ்தானம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக 18 படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்ய நீண்ட நேரம் ஆகும் என்பதால் பலர் சன்னிதானத்திற்கு செல்லாமலேயே மற்ற இடங்களில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு திரும்பி வருகின்றனர்.

தொடர்ந்து கூட்டம் அதிகரிப்பதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். அதேநேரம் பம்பைக்கு வாகனம் மூலம் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரி ஐயப்பன் பக்தர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் பம்பைக்கு வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு கேரள போலீசார் தடை விதித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எரிமேலி நிலையம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிக்கணக்கில் அங்கே பக்தர்கள் காத்திருக்கும் வீடியோ காட்சிகளும், பேருந்தில் ஆபத்தான முறையில் இடம் பிடிக்கும் காட்சிகளும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் சிறுவர்கள், பெரியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் உணவு இன்றி தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் வாகனங்களில் அடைக்கப்படுவதால் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். டிசம்பர் 4 ஆம் தேதி முதல் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்ததே தற்பொழுது நிலவும் கூட்ட நெரிசலுக்கு காரணம் என தெரிவித்துள்ள பினராயி விஜயன், பக்தர்கள் கூட்டத்தை சரியான முறையில் ஒருங்கிணைத்து கையாளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் தினசரி பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. வழக்கமாக எப்பொழுதும் 62 ஆயிரம் பக்தர்கள் நாள் ஒன்றுக்கு வரும் நிலையில், டிசம்பர் 7 ஆம் தேதி மட்டும் ஒரு லட்சம் பேர் சபரிமலையில் குவிந்துள்ளனர். பாதுகாப்பிற்கு பணியமர்த்தப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு,கடந்த ஆண்டுகளைவிட கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.