Skip to main content

சிதம்பரம் நடராஜர் கோவில் திருவிழா: கரோனா விதிமுறைகளை மீறிய தீட்சிதர்கள் மற்றும் பக்தர்கள்!

Published on 21/12/2021 | Edited on 21/12/2021

 

Chidambaram Natarajar Temple Festival: Dikshits and devotees violating corona rules

 

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குகிறது.  இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனம்,  மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா விமர்சையாக நடைபெறும். இந்த விழாக்களில் மூலவரான நடராஜர் வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவில் சிவனின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திர நாளில் மூலவரான நடராஜர் அவரது மனைவி சிவகாமசுந்தரியுடன்  நடனம் புரிந்தபடி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது இக்கோவிலின் சிறப்பாகும்.

 

இதில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநில உலக அளவில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா நடராஜர் கோவிலில் கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  அதனைத் தொடர்ந்து கோவிலில் விழாக்கள் நடைபெற்ற நிலையில் 19-ஆம் தேதி தேர் திருவிழாவும் 20-ஆம் தேதி மாலை 6.20 மணிக்கு ஆருத்ரா தரிசனம்  நடைபெற்றது. 

 

பக்தர்களின் நலனை கருதாமல்  தீட்சிதர்களின் வசதிக்காக நடத்திய தரிசனம், பக்தர்கள் குற்றச்சாட்டு.

 

தரிசனம் மதியம் 2 மணியளவில்  நடைபெறுமென கோவில் தீட்சிதர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் தரிசனத்தை பார்த்துவிட்டு உணவு அருந்த வேண்டும் என சிவபக்தர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலையிலேயே கோவிலுக்கு விரதத்துடன் வந்தனர். பக்தர்களில் சர்க்கரை நோயாளி, ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வயதானவர்கள், சிறியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கோவிலுக்கு  காலை 9 மணியிலிருந்து வரத்தொடங்கினர். இந்த நிலையில் மதியம் 2 மணி அளவில் கோவிலின் உள்ளே 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடினார்கள். 

 

கூட்டம் அதிகமாக இருந்ததால் உட்கார முடியாமல் பக்தர்கள் அவதி அடைந்தனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடும் இடத்தில் அவர்களுக்கு இயற்கை உபாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ‘எங்க கோவில் என கூறிக்கொள்ளும்’ தீட்சிதர்கள் எதுவுமே செய்யவில்லை.  இது பக்தர்கள் நலனை கருதாமல் தீட்சிதர்களின் வசதிக்காக நடத்தப்பட்டுள்ளதாக சி.முட்லூர் கிராமத்தை சேர்ந்த பானுசந்தர் கூறுகிறார். மேலும் அவர் இதுபோன்று மாலை 6.20 மணிக்கு நடைபெற்ற தரிசனத்தை பார்த்தது இல்லை.  தீட்சிதர்கள் செய்யும் சேட்டையை பொறுத்து கொள்ள முடியாமல் தரிசனம் பார்க்காமல் வெளியே வந்துவிட்டேன். இதே போல் பல பக்தர்கள் வெளியே வந்து தீட்சிதர்களின் செயல்பாடுகளை கண்டித்தனர்.

 

Chidambaram Natarajar Temple Festival: Dikshits and devotees violating corona rules

 

பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல் விடுத்து ஒருமையில் பேசிய தீட்சிதர்கள்

 

தரிசன விழாவில் செய்தியாளர்களுக்கு செய்தி சேகரிக்க அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்தனர். அப்போது வீடியோ, படம் எடுக்கக்கூடாது என தீட்சிதர்கள் செய்தியாளர்களை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் உள்ள இடத்தில் ஒலி பெருக்கி மூலம் அறிவித்து வாக்கு வாதத்தில் நேரடியாக ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்கள் தூரத்திலிருந்து படம் எடுத்தனர். இதற்கு சாமி சிலைகள் வரும் பாதையில் சாமி சிலைகள்  தெரியாதவாறு துணியை கட்டினார்கள்.  

 

இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். அப்போது பக்தர்கள் நடராஜரை தரிசனம் செய்வதற்காகத்தான் வெகுநேரமாக காத்திருக்கிறோம் நீங்க துணியை கட்டி மறைத்தால் நாங்க எப்படி தரிசனம் செய்ய முடியும் என்ற வாக்குவாதத்தில் தீட்சிதர்களிடம் ஈடுபட்டனர். இதனால் தீட்சிதர்கள் அந்தத் துணியை பக்தர்கள் எதிர்ப்பால் விலக்கிக் கொண்டனர். இது குறித்து சிதம்பரம் கோட்டாட்சியர் ரவியிடம் சிதம்பரம் பத்திரிகையாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

Chidambaram Natarajar Temple Festival: Dikshits and devotees violating corona rules

 

கரோனா தடுப்பு விதிகளை துளியளவும் கடைபிடிக்காத தீட்சிதர்கள் மற்றும் பக்தர்கள்

 

கோவில் திருவிழாவிற்கு அதிக அளவு பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் விழாவை கோவிலுக்கு உள்ளே நடத்திகொள்ளலாம் என தமிழக அரசின் உத்திரவின் படி நோய் தொற்று ஏற்படாதவகையில் பாதுகாக்கும் வகையில் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. 

 

அதனை தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று குறைந்த அளவு பக்தர்களுடன் திருவிழாவை நடத்திக் கொள்ளலாம் என திருவிழாவிற்கு அனுமதி அளிக்கப்பட்டது.  ஆனால் தேர் திருவிழாவில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  அதேபோல் தரிசன விழாவில் கோவிலுக்குள் 1 லட்சத்திற்கும்  மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

 

தமிழக அரசு கரோனா மற்றும் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக கோவிலுக்கு உள்ளே தரிசனம் மற்றும் தேர் திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மற்றும் தீட்சிதர்கள் கண்டிப்பாக அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தியது.  ஆனால் கோவிலில் பக்தர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய தீட்சிதர்கள் ஒருவர்கூட முக கவசம் அணியவில்லை அதேபோல் பக்தர்கள் 95 சதவீமான பேர் முக கவசம் அணியவில்லை. இதனால் சிதம்பரம் நடராஜர் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பெரும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என திருவிழாவில் முகக்கவசத்துடன் கலந்துகொண்ட பக்தர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

“காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தியா நிலைகுலைந்து போனது” - நிர்மலா சீதாராமன்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Nirmala Sitharaman said It was under Congress rule that India became unstable

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், மாநில தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை அனைவரும் தமிழ்நாட்டைச் சுற்றி சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர், கார்தியாயினிக்கு ஆதரவாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “சிதம்பரத்தில் பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நான் பெருமையாக கருதுகிறேன்.  தமிழ்நாட்டுக்கு பல திட்டங்களை கொண்டு வந்தவர் மோடி. பிரதான் மந்திரி கரி கல்யாணம் அன்னை யோஜனா திட்டத்தில் 80 கோடி மக்களுக்கு 2020ல் இருந்து இன்று வரைக்கும், இலவசமாக தனிநபர் ஒருவருக்கு 5  கிலோ வீதம் அரிசி வழங்கி வருகிறார். அதேபோல் கோதுமை, வழங்கும் திட்டம் செயல்படுகிறது.

விவசாயிகள் நலன் கருதி பீயன்கிசான் சமான்  யோஜனா, திட்டத்தின் கீழ் உங்களுடைய அக்கவுண்டில் ரூ.6,000 வருஷத்துக்கு வருகிறது. விவசாயப் பொருள்களுக்கு டபுள் மடங்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 11 மெடிக்கல் காலேஜ் திறந்து வைத்தார் மோடி, அதில் ஒன்று அரியலூரில் உள்ளது. இதைத் தவிர நேஷனல் ஹைவே விரிவாக்குதல் செய்வதற்கும் நல்ல சாலையாக போடுவதற்கும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. 60 கிலோ மீட்டர் ரோடுக்கு மீன்சுருட்டி நேஷனல் ஹைவேக்கு  ரூ.1025  கோடி ரூபாய் ரோடு போடுவதற்கு கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சத்திரம் ரயில்வே நிலையம் புதுமையாக்கப்படுவதற்கு வேண்டுமென்ற திட்டம் போட்டு உள்ளார்கள். அரியலூர், சிதம்பரம்  ஸ்டேஷன் இவற்றை எல்லாவற்றிற்கும் அமர்த்பாரத் ஸ்டேஷன் ஸ்கீம் மூலமாக புதுப்பிக்கப்படும். மீனவர்கள் அதிகமாக உள்ள ஏரியா இது, விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு இதை வைத்து பேங்கில் விவசாயிகள் கடன் வாங்க முடியும், அதற்கு அரசு மூலம் மானியம் கொடுக்கப்படுகிறது. இதனால் குறைந்த வட்டியில் அவர்களுக்கு கடன் கிடைக்கிறது.

சிதம்பரம் பகுதியில் கிசான் கிரெடிட் கார்டு அனைத்து மீனவர்களுக்கும் கிடைப்பதற்கு கணக்கு எடுக்கப்படும். முந்திரி தொழில் ஈடுபடும் பெண்களுக்கு சுய உதவிக் குழு மூலமாக. அவர்களை கூட்டமைத்து அவற்றை சுத்திகரிப்பு செய்து  வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியும், அண்ணாமலை பல்கலைக்கழகமும் அங்குள்ள மருத்துவமனையும் அரசு கட்டுப்பாட்டில் எடுத்த பிறகு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

திமுக, காங்கிரஸ் கட்சி மற்றும் தோழமைக் கட்சியில் ஆட்சியில் இருக்கும் போது தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளில் ஊழல் காரணமாக இந்திய நாடு நிலை குலைந்து போனது, நாட்டின் தரவரிசை பட்டியலில் இந்தியா 5 ரேங்க் பட்டியலில் சென்று விட்டது. இது மோடி ஆட்சியில் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2020ல் கொரோனா தொற்று நோய் வந்ததும் உலகமே நடுங்கியது. அந்தச் சமயத்திலும் நாட்டை முன்னேற்றத்துக்கு கொண்டு வந்தவர் மோடி

மோடி வந்தால், கோ பேக் மோடி என்று தமிழ்நாட்டில் குரல் கொடுத்து வருகிறார்கள். அண்ணாமலை ஐபிஎஸ் படித்துவிட்டு அரசியலுக்கு வந்தவரை ஜோக்கர் என்று ஏளனமாக பேசுகிறார்கள், ஆனால்  அவர் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்” என்று பேசினார்.