Skip to main content

அண்ணாமலைப் பல்கலைக்கழக பணி நிரவல் ஊழியர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பெற்று தர சார் ஆட்சியரிடம் மனு!

Published on 19/07/2021 | Edited on 19/07/2021

 

 

chidambaram annamalai university employees election


கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள், முன்னாள் ஊழியர் சங்கத்தின் பொதுசெயலாளர் ரவி தலைமையில், பொறுப்பாளர்கள் சியாம்சுந்தர், ஜான், மற்றும் நிர்வாகிகள் தேவேந்திரன், கனக சித்தன், தமிழ்ச்செல்வன், கந்தசாமி ஆகியோர் சிதம்பரம் சிதம்பரம் சார் ஆட்சியர்  மதுபாலனை சந்தித்து மனு அளித்தனர்.

 

அதில், "அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் இந்த தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 3,699 ஊழியர்களும், மருத்துவத்துறையில் 1,225 ஊழியர்களும், பணி நிரவலில் அரசின் பலதுறைகளில் சுமார் 4160 ஊழியர்கள் என தமிழகம் முழுவதும் பணியாற்றி வருகின்றனர். 

 

கடந்த 2015- ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சங்கத் தேர்தல்களில் அனைத்து ஊழியர்களும் வாக்களித்து வந்த நிலையில், 2018- ஆம் ஆண்டு நடைபெற்ற ஊழியர் சங்கத்தேர்தலில், அப்போது பொறுப்பில் இருந்த சங்க பொறுப்பாளர்கள் சுயநலத்தோடு செயல்பட்டு, பணி நிரவலில் சென்ற ஊழியர்களுக்கு வாக்குரிமை இல்லை என்றும் தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற சங்கப் பொதுக்குழுவில் ஒருதலைபட்சமாக அறிவித்து தேர்தலை நடத்திவிட்டனர்.

 

அரசின் பலதுறைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள், அங்குள்ள ஊழியர் சங்கங்களில் உறுப்பினர்களாக சேரஅனுமதிக்கப்படுவதில்லை. அவ்வாறு அனுமதிக்காததால் அரசு வழங்கும் நியாயமான சலுகைகளை கூட கேட்டுப் பெற அலைக்கழிக்கப்படுகின்றனர்.

 

மேலும் பணி நிரவல் ஊழியர்களின் பிஎஃப், சி.பி.எஸ்.,இ.எஸ்.ஐ.,சந்தா தொகை மற்றும் கடன் தொகை பிடித்தம் போன்ற அனைத்தும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலேயே பராமரிக்கப்பட்டு வருகிறது.  இதுபோன்ற சூழலில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் சார்ந்தக் கோரிக்கைகளை முன்னெடுக்கும் வகையிலும், பல்கலைக்கழக சங்கத் தேர்தலில் வெற்றி பெறும் சங்க நிர்வாகிகளே பணி நிரவல் ஊழியர்களின் கோரிக்கைகளைக் கையாளும் வகையிலும், நடைபெற உள்ள ஊழியர் சங்கத் தேர்தலில், பழைய முறைப்படி வாக்களிக்க அனுமதி அளிக்க வேண்டும்." இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள்; திணறும் பரனூர்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
People returning to Chennai after elections; The stifling Paranur toll plaza

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏற்கனவே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இலட்சக்கணக்கானோர் வாக்களிப்பதற்காக சென்றிருந்தனர். இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மூன்று நாள் விடுமுறை முடிந்து சென்னைக்கு அதிகப்படியான மக்கள் திரும்புவதால் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.