Skip to main content

சுத்துப் போட்ட ரவுடிகள்; தனி ஆளாய் துணிந்த பெண் காவலர்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

chennai marina woman constable kala brave action
 காவலர்  கலா

 

மெரினா கடற்கரைக்கு கடந்த சனிக்கிழமை மாலை காதல் ஜோடி ஒன்று பைக்கில் வந்துள்ளனர். அப்போது அந்த வழியாக பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள சர்வீஸ் சாலையில்  2 பைக்கில் வந்த 4 பேர் இந்த காதல் ஜோடி வந்த பைக் மீது மோதினர். இதனால் நிலைதடுமாறிய காதல் ஜோடி பைக்குடன் கீழே விழுந்துள்ளனர். இதையடுத்து அந்த ரவுடி கும்பல் காதல் ஜோடியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளனர். மேலும் இளம்பெண்ணுக்கு பாலியல் ரீதியாகவும் தொந்தரவு கொடுத்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்லவும் முயன்றனர். இந்நிலையில் ரவுடி கும்பலின் அநாகரிக செயல் மற்றும் பாலியல் தொல்லையால் அந்த இளம்பெண் கதறி அழுதுள்ளார். இவற்றைப் பார்த்து அங்கிருந்த சிலர் ரவுடிகளைத் தட்டி கேட்காமல் அமைதி காத்தனர். இதனை ரவுடிகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டனர்.

 

இந்நிலையில் இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் கலா என்பவர் சம்பவ இடத்திற்கு ஓடி வந்துள்ளார். இதனை கவனித்த ரவுடிகள் 4 பேரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். இருப்பினும் அந்த பெண் காவலர் தனி நபராக போராடி 4 பேரையும் மடக்கிப் பிடித்தார். பெண் காவலரை ரவுடிகள் 4 பேரும் ஆபாசமாகப் பேசி அவரைத் தாக்க முயன்றனர். இதையடுத்து  கொலை மிரட்டல் விடுத்து விட்டுப் பெண் காவலரின் பிடியில் இருந்து அவர்கள் வந்திருந்த பைக்கில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

 

ரவுடிகள்  தப்பிச் சென்ற பைக் பதிவு எண்களுடன் அண்ணா சதுக்கம் போலீசாருக்கு பெண் காவலர் கலா தகவல் அளித்தார். அதன் பிறகு பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு உரிய ஆறுதல் தெரிவித்து காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். அதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தினர். இதில் இந்த ரவுடிகள் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தமிழரசன், உதயகுமார், வசந்தகுமார் மற்றும் சோமசுந்தரம் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். மேலும் இவர்கள் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார்  4 ரவுடிகள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில்  தனி ஒருவராக  போராடி  இளம் பெண்ணை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய பெண் காவலர் கலாவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

கொட்டும் மழையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Study of Minister Udayanidhi Stalin in rain

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

அதே சமயம் வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (04.12.2023) ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை வி.பி. ராமன் சாலையில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

சென்னை மெட்ரோ, புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம்

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Change in Chennai Metro, Suburban Train Services

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (04.12.2023) ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்கள் நாளை (04.12.2023) ஞாயிற்றுக்கிழமை பின்பற்றப்படும் அட்டவணைப்படி இயங்கும் எனத் தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை மெட்ரோ ரயில்கள் நாளை (04.12.2023) ஒரு நாள் மட்டும் சனிக்கிழமை நேர அட்டவணையின் படி இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

 

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “மிக்ஜாம் புயல் காரணமாக நாளை 04.12.2023 (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் சனிக்கிழமை நேர அட்டவணையின்படி மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். அதன்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்