Skip to main content

சுத்துப் போட்ட ரவுடிகள்; தனி ஆளாய் துணிந்த பெண் காவலர்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

chennai marina woman constable kala brave action
 காவலர்  கலா

 

மெரினா கடற்கரைக்கு கடந்த சனிக்கிழமை மாலை காதல் ஜோடி ஒன்று பைக்கில் வந்துள்ளனர். அப்போது அந்த வழியாக பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள சர்வீஸ் சாலையில்  2 பைக்கில் வந்த 4 பேர் இந்த காதல் ஜோடி வந்த பைக் மீது மோதினர். இதனால் நிலைதடுமாறிய காதல் ஜோடி பைக்குடன் கீழே விழுந்துள்ளனர். இதையடுத்து அந்த ரவுடி கும்பல் காதல் ஜோடியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளனர். மேலும் இளம்பெண்ணுக்கு பாலியல் ரீதியாகவும் தொந்தரவு கொடுத்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்லவும் முயன்றனர். இந்நிலையில் ரவுடி கும்பலின் அநாகரிக செயல் மற்றும் பாலியல் தொல்லையால் அந்த இளம்பெண் கதறி அழுதுள்ளார். இவற்றைப் பார்த்து அங்கிருந்த சிலர் ரவுடிகளைத் தட்டி கேட்காமல் அமைதி காத்தனர். இதனை ரவுடிகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டனர்.

 

இந்நிலையில் இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் கலா என்பவர் சம்பவ இடத்திற்கு ஓடி வந்துள்ளார். இதனை கவனித்த ரவுடிகள் 4 பேரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். இருப்பினும் அந்த பெண் காவலர் தனி நபராக போராடி 4 பேரையும் மடக்கிப் பிடித்தார். பெண் காவலரை ரவுடிகள் 4 பேரும் ஆபாசமாகப் பேசி அவரைத் தாக்க முயன்றனர். இதையடுத்து  கொலை மிரட்டல் விடுத்து விட்டுப் பெண் காவலரின் பிடியில் இருந்து அவர்கள் வந்திருந்த பைக்கில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

 

ரவுடிகள்  தப்பிச் சென்ற பைக் பதிவு எண்களுடன் அண்ணா சதுக்கம் போலீசாருக்கு பெண் காவலர் கலா தகவல் அளித்தார். அதன் பிறகு பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு உரிய ஆறுதல் தெரிவித்து காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். அதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தினர். இதில் இந்த ரவுடிகள் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தமிழரசன், உதயகுமார், வசந்தகுமார் மற்றும் சோமசுந்தரம் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். மேலும் இவர்கள் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார்  4 ரவுடிகள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில்  தனி ஒருவராக  போராடி  இளம் பெண்ணை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய பெண் காவலர் கலாவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.