Skip to main content

காப்பான் பட விழாவில் ரஜினியின் பேச்சு! உன்னிப்பாக கவனிக்கும் திமுக!

Published on 22/07/2019 | Edited on 22/07/2019

நடிகர் சூர்யா நடிக்கும் காப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேச்சில் அரசியல் ரீதியான கருத்துக்கள் எதிரொலித்தன.  பாஜக அரசின் புதிய தேசிய கொள்கைக்கு எதிராக சமீபத்தில் வாள் சுழற்றியிருந்தார் நடிகர் சூர்யா. இது பல்வேறு தளங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தின. இந்த நிலையில், காப்பான் இசை வெளியீட்டு விழாவில் பேசியவர்கள், 'புதிய கல்வி கொள்கை குறித்து சூர்யா பேசிய கருத்துக்களை ரஜினி பேசியிருந்தால் உடனே பிரதமர் மோடிக்கு எட்டியிருக்கும்' என்றனர். இதனை தனது பேச்சில் சுட்டிக்காட்டிய ரஜினி, ‘’நான் பேசினால் மோடிக்கு எட்டியிருக்கும் என்கிறார்கள். ஆனால், சூரியா பேசியதும் எட்டியிருக்கும்‘’என சூர்யாவிற்கான ஒரு முக்கியத்துவத்தை தந்த அவர், தனது பேச்சு மோடிக்கு உடனடியாக தெரிய வரும் என்பதை மறுக்கவில்லை. ரஜினியாகிய நான் எதைப் பேசினாலும் அது உடனடியாக மோடிக்கு தெரியப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்துவதாக இருந்தது அவரதுப் பேச்சு !  

 

chennai kaappaan film audio launch actor rajini kandh speech

 

 

மேலும், சமீபத்தில் சென்னையில் வெளியிடப்பட்ட வைரமுத்துவின் தமிழராற்றுபடையின் நூல் வெளியீட்டு விழாவில், தமிழினம் எப்படி இருக்க வேண்டும்? அந்த இனம் எப்படி செயல்பட வேண்டும்? என ப.சிதம்பரம் தெரிவித்த கருத்துக்களை காப்பான் பட விழாவில் மேற்கோள்காட்டினார் ரஜினி. ரஜினியின் இந்த பேச்சும் அரசியல் ரீதியாக உற்றுப்பார்க்கப்படுகிறது. தமிழராற்றுப்படை நூல் வெளியீட்டு விழாவில்  மு.க.ஸ்டாலின், வைகோ ஆகியோர் முன்வைத்த கருத்துக்களை மேற்கோள் காட்டாமல் ப.சிதம்பரத்தின் கருத்துக்களை மட்டும் சுட்டிக்காட்டி ரஜினி பேசியிருப்பதை திமுக, காங்கிரஸ் தரப்பில் விவாதத்தை உருவாக்கியிருக்கிறது.குறிப்பாக, வைரமுத்துவின் நூல் வெளியிட்டு விழாவை பாராட்ட ரஜினி நினைத்திருந்தால் வைரமுத்துவையும் அவரது நூலில் உள்ள கருத்துக்களையும் மட்டும் அவர் பாராட்டியதோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம். ஆனால், ப.சிதம்பரத்தின் கருத்துக்களை மேற்கோள் காட்டி எதற்காக வியந்து பாராட்ட வேண்டும்? என அறிவாலய வட்டாரங்களில் எதிரொலிக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கும் இதனை சிலர் எடுத்துச் சென்றிருப்பதாகவும் சொல்கின்றனர் திமுக நிர்வாகிகள்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.