Skip to main content

சந்தன வீரப்பன் சமாதி அருகே மாதையன் உடல் அடக்கம்! 

Published on 27/05/2022 | Edited on 27/05/2022

 

Chandana Veerappan Samadhi Madhayan's incident

 

உடல் நலக்குறைவால் உயிரிழந்த, ஆயுள் தண்டனை கைதியான சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் உடல், மூலக்காட்டில் வீரப்பன் சமாதி அருகே புதன்கிழமை (மே 25) இரவு அடக்கம் செய்யப்பட்டது.

 

சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் (வயது 78). ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் காவல்நிலைய எல்லையில் வனச்சரகர் சிதம்பரநாதன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

 

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர் இருதய பாதிப்பு, ஆஸ்துமா, நீரிழிவு உள்ளிட்ட உபாதைகளால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் அடிக்கடி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இரண்டு முறை இருதய அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. 

 

இந்நிலையில், மே 1- ஆம் தேதி அவருடைய உடல்நலம் மீண்டும் பாதிக்கப்பட்டது. அவர் உடனடியாக அதே நாளில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியூ பிரிவில் சிகிச்சையில் இருந்த அவர், மே 25- ஆம் தேதி அதிகாலை 05.45 மணியளவில் உயிரிழந்தார். 

 

சிறைக்கைதி மரணம் என்பதால், இதுகுறித்து சேலம் மாவட்ட மூன்றாவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் தங்க கார்த்திகா நேரில் விசாரணை நடத்தினார். அவர் முன்னிலையில் மாதையனின் சடலம் கூராய்வு செய்யப்பட்டு, வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. 

 

உடற்கூராய்வு செய்யப்பட்ட முடிந்த பிறகு, மே 25- ஆம் தேதி மாலை 06.30 மணியளவில் மாதையனின் சடலம், உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறை அருகே, தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள், உறவினர்கள் மாதையன் சடலத்துக்கு வீர வணக்கம் செலுத்தினர். 

 

இதையடுத்து அரசு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சடலம், வீரப்பனின் சொந்த ஊரான மேட்டூர் அருகே உள்ள மூலக்காடுக்குக் கொண்டு செல்லப்பட்டது.மூலக்காட்டில் வீரப்பன் சமாதி அருகே, மாதையன் சடலமும் சம்பவத்தன்று இரவு 11.00 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. 

 

இறுதிச்சடங்கில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, அவருடைய மகள்கள் வித்யா, விஜயலட்சுமி, மாதையனின் மனைவி மாரியம்மாள், மகள் ஜெயம்மாள், மருமகன் முனுசாமி, பேரன் ஸ்ரீநாத், பழங்குடி மக்கள் சங்க பொறுப்பாளர் அன்புராஜ் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.