Skip to main content

அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

Chance of rain in 15 districts in next 3 hours

 

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

ஏற்கனவே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், சிவகங்கை, புதுக்கோட்டை, பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

குளமாகிய சிவானந்தா சாலை; மழைநீரில் மூழ்கிய கார் 

Published on 04/12/2023 | Edited on 04/12/2023

 

 Pond Sivananda Road; A car submerged in rainwater

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவிலிருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக 23 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. தற்போதைய நிலவரப்படி 'மிக்ஜாம்' புயல், புயல் என்ற நிலையில் இருந்து தீவிரப் புயலாக மாறி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னைக்கு கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது புயல் மையம் கொண்டுள்ளது.  

 

இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிவானந்தா சாலையில் அதிக அளவிலான மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அந்த பகுதியே குளம் போல காட்சியளிக்கிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அந்த வழியாக யாரும் போக்குவரத்து மேற்கொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை மீறி ஒருவர் காரை செலுத்திய நிலையில் வெள்ளத்தில் கார் சிக்கியது. இதனால் அந்த கார் மூழ்கும் நிலை ஏற்பட்டது. அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

தீவிரப் புயலானது 'மிக்ஜாம்'-சென்னைக்கு அலர்ட்

Published on 04/12/2023 | Edited on 04/12/2023

 

nn


 
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவிலிருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக 23 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. தற்போதைய நிலவரப்படி 'மிக்ஜாம்' புயல், புயல் என்ற நிலையில் இருந்து தீவிரப் புயலாக மாறி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னைக்கு கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது புயல் மையம் கொண்டுள்ளது. அதேநேரம் இன்று இரவு அல்லது நாளை காலை வரை இதேபோல் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வு நிறுவனம் ஒன்றும் தெரிவித்துள்ளது. நாளை முற்பகல் மசூலிப்பட்டினம்-நெல்லூர் அருகே தீவிரப் புயலாகவே இப்புயல் கரையைக் கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்