Skip to main content

வாலிபரிடம் செயின் திருட்டு..! இரு திருநங்கைகள் கைது..! 

Published on 19/04/2021 | Edited on 19/04/2021

 

Chain theft from a teenager ..! Two transgender people arrested ..!

 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் உள்ளது ஆவணிப்பூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த தாஸ் என்பவரது மகன் ஹரி ராஜன் வயது 26. இவர் சம்பவத்தன்று இரவு, திண்டிவனம் மேம்பாலத்தில் இருந்து பைக்கில் தன் ஊருக்கு செல்வதற்காக வந்துகொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து சென்ற இரண்டு திருநங்கைகள், திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் தீயணைப்பு நிலையம் எதிரே ஹரி ராஜனை வழிமறித்து அவரிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர்.  

 

பின்னர், அந்த இரு திருநங்கைகளும் இளைஞர் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துக்கொண்டு அவரை தாக்கி குப்புற தள்ளிவிட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். ஒருவழியாக தட்டுத்தடுமாறி எழுந்த ஹரிராஜன், திண்டிவனம் காவல் நிலையத்திற்குச் சென்று திருநங்கைகள் குறித்து புகார் அளித்துள்ளார். 

 

அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர். மேலும், டி.எஸ்.பி. கணேசன், திருநங்கைகளைக் கண்டுபிடிப்பதற்காக தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து செயின் பறித்துச் சென்ற திருநங்கைகளை அடையாளம் கண்டுகொண்டு தேடிவந்தனர். 

 

தீவிர விசாரணையைத் தொடர்ந்து, புதுச்சேரி அருகே உள்ள ரெட்டியார் பாளையத்தைச் சேர்ந்த 21 வயது திருநங்கையும், அரியாங்குப்பத்தைச் சேர்ந்த 28 வயது திருநங்கை ஆகிய இருவரும் இந்த செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பதை போலீஸார் உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து அந்தத் திருநங்கைகளைக் காவல்துறையினர் கைது செய்தனர். 

 

மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஹரி ராஜனிடம் 2 பவுன் செயின் பறித்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து ஹரிராஜன் பறிகொடுத்த 2 பவுன் செயினையும் பறிமுதல் செய்தனர். கைதான இரண்டு திருநங்கைகளையும் அழைத்துச் சென்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.