Skip to main content

விலாசம் சொன்ன பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! 

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

Chain stolen from woman in Coimbatore

 

கோவை மாவட்டம் வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் குஷ்பூ. இவரது கணவர் ஆனந்தவேல். இவர்கள் கடந்த 21 ஆம் தேதி இரவு 8 மணியளவில் வீட்டுக்கு அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்றுவிட்டு தங்களது டூவீலரில் வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். அந்த சமயம், குஷ்பூ அணிந்திருந்த தாலி சங்கிலியை நோட்டமிட்ட 2 மர்ம நபர்கள், அவர்களை பின்தொடர்ந்துள்ளனர்.

 

ஆனால், அதற்குள் ஆனந்தவேல் - குஷ்பூ தம்பதி தங்களது இல்லத்தை அடைந்துவிட்டனர். இதையடுத்து, ஆனந்தவேலின் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த மர்ம நபர்களில் ஒருவர் பைக்கில் அமர்ந்திருக்கும் நேரத்தில் மற்றொருவர் அங்கிருந்த குஷ்பூவிடம் சென்று விலாசம் கேட்பதுபோல் நைஸாக பேசியுள்ளார். அதற்கு குஷ்பூ பதிலளிக்க துவங்கிய நிலையில், அவரது கழுத்தில் இருந்த நாலரை சவரன் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு இருவரும் பைக்கில் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

 

ஒரு கணம் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குஷ்பூ, சத்தம் போட்டு கூச்சலிட்டுள்ளார். அப்போது, அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் அந்த கொள்ளையர்களை விரட்டி விரட்டி பிடித்துள்ளனர். அதில் ஒருவர் மட்டும் பிடிபட்ட நிலையில் மற்றொருவர் வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டார். இதையடுத்து, பிடிபட்ட நபரை துடியலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவர் கையில் வைத்திருந்த நகைகள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

 

இதற்கிடையில், பிடிபட்ட நபரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பதும் கூலித்தொழில் செய்து வருவதும் தெரிய வந்துள்ளது. அதன்பிறகு, அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதே சமயம், டூவீலரில் தப்பிச் சென்ற பீளமேடு பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தற்போது கோவையில் உள்ள முக்கியப் பகுதியில் நடக்கும் திருட்டு, செயின் பறிப்பு சம்பவங்களால் அப்பகுதி மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.