Skip to main content

நீர் ஆதாரங்களை அழிக்கும் சிமென்ட் ஆலை... புதுப்பாளையம் மக்கள் போராட்டம்!

Published on 28/11/2020 | Edited on 29/11/2020

 

 Cement plant destroying water resources ... Pudupalayam people's struggle!


அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆதனக்குறிச்சி ஊராட்சியில் உள்ள புதுப்பாளையம் கிராமத்தில், ராம்கோ சிமென்ட் ஆலை நிறுவனம், சுண்ணாம்புக் கல் சுரங்கம் வெட்ட, அந்தப் பகுதியில் உள்ள நீரோடைகள், குவாரிகள், கோயில் மானிய நிலங்கள், சிறு குட்டை, குளங்களைக் கணக்கில் காட்டாமல், மூன்று வருடங்களுக்கு முன் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியது. 

 

அந்தப் பகுதியில், சுமார் 120 அடி ஆழத்திற்கு மணற்பாங்கான பகுதி உள்ளது. இந்நிலையில், சுண்ணாம்புக் கல் சுரங்க ஆழம் 300 அடிக்கு மேல் செல்லும் எனக் கூறுகிறார்கள். இதனால், அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

 

இவ்வளவு பாதிப்புகளையும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் தோலுரித்ததால், இதுவரை அவர்களால் சுரங்கம் வெட்ட முடியவில்லை. நீர்வழிப் பாதைகள், கோயில் மானிய நிலங்கள், குட்டைகளை  ஆக்கிரமித்து எல்லைக்கல் நடுதல், வேலி அமைத்தல் போன்ற வேலைகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். இதனைப் பார்த்த புதுப்பாளையம் கிராம மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கும் பொருட்டு, களத்தில் இறங்கிப் போராடி வருகின்றனர்.  

 

சிமென்ட் ஆலை நிறுவனர்கள் ஓடி ஒளிவதும், மீண்டும் வந்து மக்களைச் சீண்டுவதுமாய் உள்ளனர். அரசு அதிகாரிகளிடத்தில் மனு கொடுத்தும் எந்தப் பலனும் இல்லை. எனவே தொடர் போராட்டமே தீர்வாக இருக்கும் என்கின்றனர் போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்.

 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.