Skip to main content

பிடிபடும் ரவுடிகள்... தொடரும் வேட்டை..!

Published on 26/09/2021 | Edited on 26/09/2021

 

Caught rowdies ... -Continued hunting ..!

 

 

குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் கிரிமினல் நபர்களைத் தேடி பிடித்து கைது செய்யப்படும் நடவடிக்கை தமிழகம் முழுக்க போலீசார் தீவிரப்படுத்தியுள்ளார்கள். ஈரோடு மாவட்டத்திலும் குற்றச்சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும், தலைமறைவாக இருக்கும் ரவுடிகளை பிடிக்கச் சென்ற இரண்டு நாட்களாக மாவட்டம் முழுவதும் போலீசார் இரவு முதல் விடிய விடிய தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். 24 ந் தேதி முன்தினம் முதல் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் பலர் பிடிபட்டனர். இதேபோல் சந்தேகத்தின் பேரில் சிலர் பிடிபட்டனர். இந்தநிலையில் நேற்று இரவு 2 -வது நாளாகவும் போலீசார் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் விடிய விடிய தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-"ஈரோடு மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களைத் தடுக்கவும் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடும் நபர்களைக் கண்காணிக்கவும், தலைமறைவு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் மற்றும் கோவை சரக காவல் துணைத் தலைவர் ஆகியோர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நேரடி பார்வையில்  இரண்டு நாட்களாக இரவு தீவிர கண்காணிப்பு மற்றும் அதிரடி தேடுதல் வேட்டை நடைபெற்றது. 

 

Caught rowdies ... -Continued hunting ..!

 

ஈரோடு மாவட்ட அனைத்து காவல் அதிகாரிகளைக் கொண்டு மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி பிடியாணை பிறப்பிக்கப்பட்டுத் தலைமறைவாக இருந்த 16 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல் மாவட்டம் முழுவதும் சந்தேக நபர்கள் 65 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள 288 தங்கும் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தவிர மாவட்டம் முழுவதும் செய்யப்பட்ட தீவிர வாகன சோதனையில் 2 நாட்கள்  இரவில்  போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக  2352 வாகனங்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதுதவிர உரிய ஆவணங்களின்றி வந்த 37 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற அதிரடி சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்