Skip to main content

விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து... நக்கீரர் சிலை முன்பு மகிழ்ச்சியை பரிமாறிய விவசாயிகள்!!

Published on 24/06/2021 | Edited on 24/06/2021

 

Cases filed against farmers including Minister canceled ... Farmers' celebration

 

காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம், தென் மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம், சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள்மீது கடந்த ஆட்சிக் காலத்தில் போடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வழக்குகளைத் தமிழ்நாடு அரசு ரத்து செய்த அறிவிப்பைக் கேட்டு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். புதிய அரசு ஆட்சிக்கு வந்த சில நாட்களில் தூத்துக்குடி ஸ்டெர்லைட்க்கு எதிராகப் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

 

இந்நிலையில், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுபற்றிய செய்திகள் நக்கீரன் இணையத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று (24.06.2021) தமிழ்நாடு அரசு மீத்தேன், நியூட்ரினோ, எட்டு வழிச்சாலை ஆகியவற்றுக்கு எதிரான போராட்ட வழக்குகளும் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஹைட்ரோ கார்பன் போராட்ட வழக்கு பற்றி எந்த அறிவிப்பும் இல்லை என்ற சந்தேகம் அனைவரிடமும் இருந்தது. இந்த சந்தேகத்தைப் போக்கும் விதமாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்ட ஆடியோவில், ஹைட்ரோ கார்பன் வழக்குகளும் ரத்து செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்.

 

Cases filed against farmers including Minister canceled ... Farmers' celebration

 

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் போராட்ட வழக்கில் உள்ளவர்கள் நக்கீரர் சிலை முன்பு திரண்டு மரக்கன்றுகளை வழங்கி மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள். இதுகுறித்து கண்ணன், வடகாடு சரவணன் ஆகியோர் கூறும்போது, “விவசாயிகளைப் பாதிக்கும் திட்டமான நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தன்னெழுச்சியாக கீரமங்கலம், வடகாடு, கைகாட்டி, ஆலங்குடி, நல்லாண்டார்கொல்லை ஆகிய இடங்களில் போராடிய தற்போதைய அமைச்சர் மெய்யநாதன் உள்பட நூற்றுக்கணக்கானோர் மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர். இதற்காக தொடர்ந்து நீதிமன்றம் சென்று வருகிறோம். தற்போது இந்த வழக்குகளைத் தமிழ்நாடு அரசு ரத்து செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல ஒ.என்.ஜி.சி.யால் அமைக்கப்பட்டு விவசாயிகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் எண்ணெய் கிணறுகளையும் பாதுகாப்பாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.