Skip to main content

பட்டாசு வைத்திருந்த கார் வெடித்துச் சிதறியது... வீடுகள் சேதம்!

Published on 22/09/2021 | Edited on 22/09/2021

 

The car with the firecrackers exploded and scattered ... houses damaged!

 

தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம் அருகே காரில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்ததில் கார் வெடித்துச் சிதறியதோடு, அது தீயில் எரிந்தும் கருகியது. இந்த விபத்தில் 30- க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

 

சாத்தான்குளம் அருகேயுள்ள சிறிய கிராமம் இடைச்சிவிளை. அங்குள்ள குமரன்விளையைச் சேர்ந்த பால கிருஷ்ணன் என்பவர் அருகிலுள்ள நெல்லை மாவட்ட திசையன்விளையிலிருக்கும் அணைக்கரைப் பகுதியில் அரசு உரிமம் பெற்று வாணவெடி மற்றும் கல்வெடி தயாரிப்பு தொழிலைச் செய்து வந்திருக்கிறார். திருமணம், சடங்கு, கோவில் திருவிழா போன்ற முக்கிய விசேஷங்களுக்கு ஆர்டரின் பேரில் பட்டாசு தயாரித்துத் தன்னுடைய காரில் கொண்டு சென்று சப்ளை செய்வது வழக்கம். 

 

இந்தச் சூழலில் திருமண விழா ஒன்றிற்கு வழங்குவதற்காக சுமார் 30 ஆயிரம் ரூபாய் அளவிலான வாண வெடிகளை தன்னுடைய குடோனிலிருந்து ஏற்றிக்கொண்டு தனது காரில் நேற்று (21/09/2021) அதிகாலை 02.00 மணியளவில் இடைச்சிவிளையிலிருக்கும் தன்னுடைய வீட்டிற்கு வந்திருக்கிறார். காலையில் வெடிகளை சப்ளை செய்யும் பொருட்டு செல்வதற்காக பட்டாசு வைத்திருந்த காரைத் தனது வீட்டின் முன்பு நிறுத்தி ரிமோட் மூலம் காரின் கதவுகளை மூடியிருக்கிறார். 

The car with the firecrackers exploded and scattered ... houses damaged!

அதையடுத்து, அதிகாலை 04.00 மணியளவில் காரின் கதவு பூட்டப்பட்டிருக்கிறதா என்பதை சோதனை செய்யும் வகையில் வீட்டுவாசலில் நின்றபடி பாலகிருஷ்ணன் ரிமோட்டை இயக்கியதாகத் தெரிகிறது. அது சமயம் காரில் வைத்திருந்த வெடி திடீரென்று பயங்கர சப்தத்துடன் வெடித்ததில் காரும் வெடித்துச் சிதறியதோடு இன்ஜின் மற்றும் உதிரி பாகங்கள் சுக்குநூறாகச் சிதறியதோடு காரும் தீப்பற்றி எரிந்து கருகி நாசமாகியது. இந்த சம்பவத்தில் பாலகிருஷ்ணனின் கை பலத்த சேதமடைந்தது.

 

இந்த கார் வெடி விபத்தால் அருகிலுள்ள சுமார் 30- க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் வெடிப்பு கீறல் ஏற்பட்டதோடு, அருகிலுள்ள ஒரு வீட்டின் கூரை ஓடுகளும் தூக்கி வீசப்பட்டன. அதிகாலை நடந்த இந்தச் சம்பவத்தால் அக்கம் பக்க வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியில் திரண்டிருக்கிறார்கள். தகவலறிந்து ஸ்பாட்டு வந்த மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் சாத்தான்குளம் டி.எஸ்.பி. கண்ணன் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணையை மேற்கொண்டனர். 

 

இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பட்டாசு தயாரிப்பாளரான பாலகிருஷ்ணனைக் கைது செய்து, அவரை சிகிச்சைக்காக அவரை சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

 


பாலகிருஷ்ணன் அரசு அனுமதி பெற்று வாணவெடி தயாரித்து வந்தாலும், அதனை அனுமதியின்றி காரில் கொண்டு வந்து நிறுத்தியபோதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து மேல்விசாரணை நடந்து வருகிறது என்றார் மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமார்.

 

 

The car with the firecrackers exploded and scattered ... houses damaged!

 

பட்டாசுகளை காரின் சீட்டுக்கடியில் வைத்து கார் கதவுகளை ரிமோட் உதவியுடன் மூடியதுடன் கார் கண்ணாடிகளை காற்று புகாத வண்ணம் அடைத்திருக்கிறார். இதனால் காருக்குள்ளே ஏற்பட்ட அழுத்தம் காரணமாக சூடாகியிருக்கிறது. இந்த நேரத்தில் ரிமோட்டை இயக்கியபோது உஷ்ணம் காரணமாக வாணவெடிகள் மொத்தமாக வெடித்து பட்டாசுகள் வெளியே பறந்து சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறதாகத் தெரிகிறது என்று போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

 

பட்டாசு வைத்திருந்த கார் வெடித்துச் சிதறி கருகிய சம்பவம் அந்தப் பகுதியில் திகிலைக் கிளப்பியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.