Skip to main content

தொழிலதிபரைக் கடத்திய கர்நாடகா கும்பலைச் சுற்றி வளைத்த காவல்துறை! 

Published on 08/08/2022 | Edited on 10/08/2022

 

businessman incident police investigation

தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி நகரின் மெயின் சாலையில் பாத்திரக்கடை மற்றும் பழைய இரும்புக் கடை வைத்திருப்பவர் தங்கம். நேற்று முன்தினம் (06/08/2022) தங்கம் கடையிலிருந்த போது அரசு முத்திரை நம்பர் பிளேட்டுடன் கூடிய சொகுசு காரில் 5 பேர் டிப்டாப் உடையில் வந்திருக்கின்றனர். தங்களைப் போலீஸ் என்று கூறிக் கொண்டவர்கள் தங்கத்திடம் நீங்கள் டவரில் திருடிய பொருட்களை வாங்கியுள்ளீர்கள். புகார் உள்ளது விசாரிக்க வேண்டும் வாருங்கள் என்று அவர்கள் சொன்னதைக் கேட்டு தங்கம் சந்தேகப்பட்டு வர மறுக்க அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்றனர்.

 

அவரது செல்போனை பறித்தவர்களின் கார் மதுரையை நோக்கி பறந்தது. இதில் சந்தேகமடைந்த கடை ஊழியர்கள் உடனடியாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க, அதே சமயம் மின்னல் வேகத்தில் தகவல் மாவட்ட காவல்துறை எஸ்.பி.யான பாலாஜி சரவணனுக்கும் போயிருக்கிறது. சற்றும் தாமதிக்காமல் துரித நடவடிக்கையிலிறங்கிய எஸ்.பி. கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் எஸ்.ஐ.க்களான சிலுவை அந்தோணி, அரிகண்ணன் தலைமையிலான 8 பேர்களைக் கொண்ட தனிப்படையை அமைத்து நடவடிக்கையை விரைவுப்படுத்தியிருக்கிறார்.

 

மதுரை நோக்கிச் சென்ற காரை விரட்டிய தனிப்படையினர் வழியோர டோல்கேட்கள், செக்போஸ்ட்களை அலர்ட் செய்தனர். இதனிடையே தொழிலதிபரைக் கடத்திச் சென்ற கும்பல் கரூர் பக்கம் காரை நிறுத்தி அவரின் கழுத்தில் கத்தியை வைத்தவர்கள், 20 லட்சம் உடனடியாகத் தர வேண்டும். இல்லை என்றால் கொலை செய்துவிடுவதாக மிரட்ட, மிரண்டுபோன அவரோ தன்னிடம் அவ்வளவு பணமில்லை. 5 லட்சம் தருவதாக தொழிலதிபர் பீதியுடன் கூறியிருக்கிறார்.

 

இதன்பின் அவரது செல்போன் மூலமாக அவரை அவரது மகன் செந்திலிடம் பேச வைத்தவர்கள் 5 லட்சம் கொண்டுவரக் கூறியுள்ளனர். அதன்படி தொழிலதிபரும் பேச, அவரது மகன் பணத்தை எங்கு கொண்டுவரவேண்டும் என்று கேட்டதில், விருதுநகர் பை-பாஸ் ரோட்டுக்குக் கொண்டுவரச் சொல்லி போனைத் துண்டித்தனர்.

 

அதன்படி கடத்தல்காரர்களும் விருதுநகர் பைபாஸ் ரோட்டுக்குவர, செந்திலும் பணத்துடன் அங்கு வந்திருக்கிறார். அந்த இடத்தில் ஆள் நடமாட்டம் இருக்கவே பயந்துபோன கடத்தல்காரர்கள் விருதுநகர் தனியார் பள்ளிக்கு வரச் சொன்னவர்கள், பள்ளியருகே, செந்திலிடம் பணத்தைப் பெற்ற கும்பல் தங்கத்தைக் கீழே தள்ளிவிட்டுக் காரில் பறந்தனர். தனிப்படையினரும் கும்பலின் காரை விரட்டிச் சென்றனர். 

 

திருமங்கலம் டோல்கேட்டில் உள்ள தடுப்புகட்டையை உடைத்தெறிந்துவிட்டு கும்பலின் கார் பறந்திருக்கிறது. இதனால் டோல்கேட்டில் பரபரப்பு. இந்த நிலையில் கும்பலின் காரை பல கிலோமீட்டர் தொலைவு விரட்டிச் சென்ற தனிப்படையினர் கரூர் டோல்கேட்டிற்குத் தகவல் கொடுத்து குறிப்பிட்ட அந்தக் காரை மறிக்க, டோல்கேட்டின் குறுக்காக வரிசையாக லாரிகளை நிறுத்தி வைக்க விரைவுபடுத்த, இதனால் கரூர் டோல்கேட்டைக் கடக்க முடியாமல் தவித்த கும்பலின் காரை சேஸ் செய்த தனிப்படையினர் காரையும் கும்பலின் 5 பேரையும் சுற்றி வளைத்து தங்களின் கஷ்டடிக்குள் கொண்டு வந்தனர்.

 

அவர்களிடம் டி.எஸ்.பி. வெங்கடேஷ் விசாரணை நடத்தியதில் தொழிலதிபரைப் பணத்திற்காகக் கடத்தியது பெங்களூரைச் சேர்ந்த பரன்கவுடா, தாஸ், டேனியல், பவுல், பெரோஸ்கான் என்பதும் அவர்கள் காரில் போலி அரசு முத்திரையுடன் நம்பர் பிளேட் பொருத்தியிப்பதும் தெரியவந்தது. இதன்பின் கார் உட்பட பறிக்கப்பட்ட பணம் 5 லட்சம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த தனிப்படையினர் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.

 

பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்திய எஸ்.பி.பாலாஜி சரவணன் 230 கி.மீ. தொலைவு விரட்டிச் சென்று கும்பலை வளைத்த தனிப்படையினரைப் பாராட்டியவர், இந்தக் கடத்தலின் பின்னணியிலிருப்பவர்கள் பற்றிய விசாரணையையும் விரைவுபடுத்தியிருக்கிறார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரியாணி கடை உரிமையாளர் வழிமறித்து கொலை; போலீஸார் விசாரணை

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

Biryani shop owner incident for police investigation

 

கடலூரில் பிரியாணி கடை நடத்தி வந்த நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அந்தப் பகுதியில் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். இவர், நேற்று (26-10-23) இரவு வழக்கம் போல் வேலையை முடித்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனம் மூலம் வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள், கண்ணன் வந்த கொண்டிருந்த வாகனத்தை வழிமறித்துள்ளனர். மேலும், தாங்கள் வைத்திருந்த கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

தகவல் அறிந்த நெய்வேலி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலமாகக் கிடந்த கண்ணனை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஆகஸ்ட் மாதம் கண்ணனுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கண்ணன் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனால், எதிர் தரப்பினர் கண்ணனை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

Next Story

இறையூர் விவகாரம்; குழு அமைத்து விசாரணை

Published on 31/12/2022 | Edited on 31/12/2022

 

The affair of the city; Investigate by setting up a committee

 

புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குழு அமைத்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது.

 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள இறையூர் கிராமத்தில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். 

 

இந்நிலையில், குற்றவாளிகளைக் கண்டறிய 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இறையூரில் அக்குழு தங்களது முதற்கட்ட விசாரணையைத் துவக்கியுள்ளது. ஏடிஎஸ்பி கிருஷ்ணன் தலைமையில் இரண்டு டிஎஸ்பி-க்கள், நான்கு காவல் ஆய்வாளர்கள் மற்றும் நான்கு உதவி காவல் ஆய்வாளர்கள் அக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். 

 

இவ்விவகாரத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க 11 பேர் கொண்ட குழுவை அமைத்து திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவண சுந்தர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.