Skip to main content

“காது குடையுறது எல்லாம் சாப்பாட்டுல போட்டா எப்பிடிங்க சாப்புடுறது”- காரக்குழம்பில் இருந்த பட்ஸ்.. அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்!

Published on 05/10/2022 | Edited on 05/10/2022

 

 Buds in the food.. Shocked customer..

 

 

சென்னை அடுத்த பல்லாவரத்தில் உணவகம் ஒன்றில் பரிமாறப்பட்ட உணவில் காது குடையும் காட்டன் பட்ஸ் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் உணவகத்தின் ஊழியர்களுடன் பேசும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

 

பல்லாவரத்தில் கடந்த 60 வருடங்களாக செயல்பட்டு வரும் உணவகத்திற்கு அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் மதிய உணவு சாப்பிடச் சென்றுள்ளார். சாப்பிடும் பொழுது காரக்குழம்பில் காதுகளை குடையும் பட்ஸ் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அதை தனது செல்போனில் வீடியோ காட்சியாக எடுத்துக்கொண்டு அதை அங்கிருந்த பணியாளர்களிடம் காட்டி கேட்ட பொழுது அவர்கள் சரியாக பதில் சொல்லாததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது.

 

அந்த வீடியோ பதிவில், “பாருங்க இது. காது குடையுறது எல்லாம் சாப்பாட்டுல போட்டா எப்பிடிங்க சாப்புடுறது. யோசிச்சி பாருங்க. காதுக்கு யூஸ் பண்றதெல்லாம் சாப்பாட்டுக்கு எப்படி வரும்? சாப்பாட்டுக்கு காசு வாங்குறீங்கள்ள” என வாடிக்கையாளர் உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களுடன் கேட்கும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

நாள் கடந்த மாமிசப் பொருட்கள், சுகாதாரமற்ற முறையில் உணவுகளில் தயார் செய்யப்படும் முறை, உணவுகளில் புழு, பூச்சிகள் போன்றவை இருப்பது எனத் தொடர்ந்து இது போன்ற பிரச்சனைகள் வருவதால் உணவுத்துறை அதிகாரிகள் தங்களது சோதனைகளைக் கடுமையாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

 


சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.