Skip to main content

வளைகாப்பு நிகழ்விற்குச் சென்ற பெண்; வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி! 

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
Broke the lock of the house and stole 10 pounds of jewellery

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புத்திராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருமால் மனைவி மீரா. திருமால் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீராவின் அண்ணன் மனைவிக்கு புதுபாலப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மீரா தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிக்கொண்டு நேற்று மாலை புதுபாலப்பட்டு கிராமத்திற்குச் சென்றுள்ளார். 

தொடர்ந்து நிகழ்ச்சி முடித்துவிட்டு மீரா குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மீரா உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு மீரா அதிர்ச்சி அடைத்தார். இதுக்குறித்து மீரா வடபொன்பரப்பி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார், புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருக்கோவிலூர் டிஎஸ்பி மனோஜ் குமார் தலைமையிலான போலீசார் கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீட்டில் உள்ள நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கைரேகை நிபுணர் ராஜவேல் குழுவுடன் மோப்பநாய் ராக்கி வரவழைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீட்டில் உள்ள கைரேகைகள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

Broke the lock of the house and stole 10 pounds of jewellery

இதுக்குறித்து மீரா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து டிஎஸ்பி மனோஜ் குமார் மற்றும் சங்கராபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் விநாயக முருகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து சங்கராபுரம் பகுதியில் கொள்ளை சம்பவம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வரும் நிலையில் போலீசார் கண்காணிப்பு பணியினை தீவிரப்படுத்தி கொள்ளை சம்பவங்களை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

நான்கு பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு ; போலீசார் விசாரணை

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
nn

ஈரோட்டில் நான்கு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு சோலார் அருகே வெங்கடேசன் என்பவர் சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். வெளியூர்களுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறார். இந்த பேருந்துகள் அதே பகுதியில் இரவு நேரத்தில் நிறுத்தப்படுவது வழக்கம். இதேபோல் மற்ற பேருந்துகளும் அதே பகுதியில் நிறுத்தப்படுவது வழக்கம்.

நேற்று இரவு வழக்கம் போல் பேருந்துகள் நிறுத்தப்பட்டு இருந்தன. நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பேருந்துகள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மூன்று பஸ்களின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்தன. அதேபோல் ஒரு சுற்றுலா வாகனத்தின் கண்ணாடியும் உடைந்தது. இது குறித்து வெங்கடேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக இதுகுறித்து மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் போட்டி அல்லது முன் விரதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். நிறுவனத்தில் வேலை செய்த முன்னாள் ஊழியர்கள் மற்றும் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Next Story

இடைத்தேர்தலில் வேட்புமனு நிராகரிப்பு; டவர் மேல் ஏறிய வேட்பாளரால் பரபரப்பு

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Rejection of nomination in by-election; A sensation by the candidate who climbed to the top of the tower

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை கண்டித்து, திருச்சியில் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி, ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்து கழக நடத்துநர் திடீர் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி உறையூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஓய்வுபெற்ற பிறகு சமூக செயற்பாட்டாளராக இருந்து வருகிறார். இவர் நடந்து முடிந்த எம்.பி தேர்தலில் திருச்சி நாடாளுமன்றத்  தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு 675 வாக்குகள் பெற்றார்.

இந்தநிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆயினும் அவரது மனு தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனை கண்டித்து ராஜேந்திரன் இன்று காலை திருச்சி நீதிமன்றம், எம்.ஜி.ஆர் சிலை அருகே உள்ள உயர்மின்னழுத்த கோபுரத்தில் ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கண்டோன்மெண்ட் தீயணைப்புத் துறையினர் காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா,திருச்சி மேற்கு தாசில்தார் விக்னேஸ்வரன் ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆயினும் சமாதானம் அடையாத ராஜேந்திரன் தனது போராட்டத்தை தொடர்ந்தார்.

அவர் போராட்டத்தை வேடிக்கை பார்க்க பொதுமக்கள் கூடியதால் எம்.ஜி.ஆர் சிலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் சிலர் காவல்துறை தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் டவரின் மீது ஏறி அவரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கினர். இதனால் அவரின் இரண்டு மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து கண்டோன்மெண்ட் போலீசார் ராஜேந்திரனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.