Skip to main content

விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கில் விடுவிக்கப்படும் சிறுவன்! -சிபிசிஐடி காவல்துறை பரிந்துரை!

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

Boy released in Virudhunagar case! -CBCID Police Recommendation!

 

இளம்பெண்ணால் பாதிக்கப்பட்டது சிறார்கள்தான்! – விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கில் புதிய திருப்பம்!’ என்னும் தலைப்பில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி கைது செய்யப்பட்ட 8 பேரில் ஒருவனான 15 வயதுச் சிறுவன் அளித்துள்ள புகார், பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இளம்பெண்ணே குற்றம் புரிந்தார் எனப் பூமராங்காக அந்தப் பெண் பக்கம் திரும்பியுள்ளதைச் சுட்டிக்காட்டியிருந்தோம். இந்நிலையில், இவ்வழக்கில் அச்சிறுவன் சிபிசிஐடி போலீசாரால் விடுவிக்கப்படலாம் எனத் தகவல் கசிந்துள்ளது.  

 

விருதுநகரில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில், ஹரிஹரன், ஜுனத் அகமது, பிரவீன், மாடசாமி மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை, சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். மேலும், அந்த இளம்பெண், அவருடைய பெற்றோர், கைதானோரின் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டனர். சம்பந்தப்பட்டவர்களின் செல்போன்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

 

Boy released in Virudhunagar case! -CBCID Police Recommendation!

 

இதுவரை நடத்திய விசாரணையின் அடிப்படையில்,  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் பணியில் சிபிசிஐடி போலீசார்  ஈடுபட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள 8 பேரில்,  பள்ளி மாணவர்களில் ஒருவர் மீது குற்றம் செய்ததற்கான எந்தவொரு ஆதாரமும், முகாந்திரமும் இல்லாத காரணத்தால், அம்மாணவனை மட்டும் வழக்கிலிருந்து விடுவிக்க முடிவெடுத்து, நீதிமன்றத்தில் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதனால், 7 பேர் மீது மட்டுமே குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டு, விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.
 

ஒரு சிறுவனை மட்டும் வழக்கிலிருந்து ஏன் விடுவிக்கின்றனர்?

 

‘18 நாள் சிறைவாசத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானேன். விருதுநகர் ஊரகக் காவல்நிலையப் போலீசார், இளவரான என்னைக் கட்டாயப்படுத்தி தவறாக வழிநடத்திய அந்தப் பெண் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. அதனால், இந்த  வழக்கில் போக்சோ நீதிமன்றம் தலையிட்டு, விசாரணை மேற்கொண்டு, அந்தப் பெண் மீது வழக்கு பதிவுசெய்து, சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி கிடைக்கச் செய்யவேண்டும்.’ எனத் தமிழக முதல்வர் வரையிலும் அனுப்பிய புகார்தான்,  அச்சிறுவனை இந்த வழக்கிலிருந்து சிபிசிஐடி போலீசார் விடுவிப்பதற்கான காரணமாகப் பேசப்படுகிறது.  

 

Boy released in Virudhunagar case! -CBCID Police Recommendation!

 

ஆதாரம் இல்லாமல் அவசரகதியில் ஏன் 15 வயதுச் சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பவேண்டும்? அப்புறம் ஏன் வழக்கிலிருந்து விடுவிக்கவேண்டும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது