Skip to main content

மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

Published on 25/05/2024 | Edited on 25/05/2024

 

Boy lose their live due to electric shock

சங்கரன்கோவிலில் மின்சாரம் தாக்கி 7 ஆம் வகுப்பு சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில், பல இடங்களில் இடி மின்னல் பலத்த காற்றுடன் மழை பொழிந்து வருகிறது. சில இடங்களில் பலத்த காற்று காரணமாக மின் கம்பிகள் அறுந்து விழுந்து, அதை தெரியாமல் மிதித்து சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் நெல்லையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் புதுசுப்புலாபுரம் கிராமத்தில் 7 ஆம் வகுப்பு பயின்று வந்த சிறுவன் அகிலேஷ் மின் கம்பத்தை பிடித்து போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

பம்புசெட்டில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நிகழ்ந்த துயரம்; சோகத்தில் கிராம மக்கள்

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Tragedy befell the boys who went to bathe in Pampuset; Villagers in sorrow

விழுப்புரத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்தது பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது தடுத்தாட்கொண்டூர் கிராமம். இந்தப் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் மற்றும் சப்தகிரி ஆகிய இரண்டு சிறுவர்கள் அந்தப் பகுதியில் உள்ள வயல்வெளியில் உள்ள பம்பு செட்டில் குளித்து கொண்டிருந்தனர். அப்பொழுது மேலே சென்ற மின்கம்பி திடீரென அறுந்து வாய்க்கால் தண்ணீரில் விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி சிறுவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்த சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு திருவெண்ணைநல்லூர் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பம்புசெட்டில் குளித்துக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி இரண்டு சிறுவர்கள் ஒரே இடத்தில் உயிரிழந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழப்பு; சோகத்தில் வேலூர் மக்கள்

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Girl lose their live due to electric shock; Area people in tragedy

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 14 வயது சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ளது பரதராமி என்னும் பகுதி உள்ளது. இங்கு வசித்து வருபவர் கோபி. அவருடைய மகள் சஞ்சனா(14 வயது) அரசு பள்ளியில் பயின்று வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் குளிப்பதற்காக தண்ணீர் ஹீட்டரை ஆன் செய்த போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு மயக்கம் அடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி சஞ்சனா உயிரிழந்துள்ளார். வாட்டர் ஹீட்டரில் மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.