Published on 25/05/2024 | Edited on 25/05/2024
![Boy lose their live due to electric shock](http://image.nakkheeran.in/cdn/farfuture/2isvcDPsLVU8p-CIlsWdHs87U320wbVCSSd8yp9SkPI/1716655559/sites/default/files/inline-images/a71874.jpg)
சங்கரன்கோவிலில் மின்சாரம் தாக்கி 7 ஆம் வகுப்பு சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில், பல இடங்களில் இடி மின்னல் பலத்த காற்றுடன் மழை பொழிந்து வருகிறது. சில இடங்களில் பலத்த காற்று காரணமாக மின் கம்பிகள் அறுந்து விழுந்து, அதை தெரியாமல் மிதித்து சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் நெல்லையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் புதுசுப்புலாபுரம் கிராமத்தில் 7 ஆம் வகுப்பு பயின்று வந்த சிறுவன் அகிலேஷ் மின் கம்பத்தை பிடித்து போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.