Skip to main content

இறந்தவர் உடலுக்கு உரிமை கொண்டாடிய இருதரப்பினர்: போலீஸ் தலையீட்டால் சமாதானம்!! 

Published on 07/06/2021 | Edited on 07/06/2021

 

Both parties right to the body of the deceased; Peace with police intervention

 

காஞ்சிபுரம் அடுத்துள்ள முக்கூடல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன் (74). இவருக்கு ஏற்கெனவே இரண்டு மனைவிகள், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் முதல் மனைவி இறந்துவிட்டதால், அவரது மகன் ஸ்ரீராம் தனது தந்தையை வைத்து சரியான முறையில் பராமரிக்கவில்லை. அதனால், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்துள்ள பனையபுரத்தில் தனது இரண்டாவது மனைவி குமாரி (68), அவரது மகள் வனிதா (39) ஆகியோரை தேடி வந்துள்ளார் வரதராஜன்.

 

அப்போது இரண்டாவது மனைவியும் மகளும் பாசத்துடன் வரவேற்று அவருக்குத் தேவையான அனைத்தையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களோடு வைத்துக் பராமரிப்பு செய்து பாதுகாத்துவந்தனர். இந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக உடல்நிலை குன்றிய வரதராஜ் நேற்று (06.06.2021) மாலை உயிரிழந்துள்ளார். இதுகுறித்த தகவல் முக்கூடலில் இருந்த முதல் மனைவியின் மகனான ஸ்ரீராம் என்பவற்கு தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த ஸ்ரீராம் தனது ஊரிலிருந்து உறவினர்கள் பத்து பேருடன் நேற்று மதியம் பனையபுரம் வந்துள்ளார்.

 

அங்கு வந்த ஸ்ரீராம் தனது தந்தையின் உடலை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும். தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று இறுதி சடங்குகள் செய்து அடக்கம் செய்யப்போவதாக கூறியுள்ளார். தந்தை உயிரோடு இருக்கும்போது அவரை உரிய முறையில் பாதுகாக்க தவறியதால், அவர் எங்களைத் தேடி வந்ததனால் நாங்கள் நல்லமுறையில் கவனித்துப் பாதுகாத்துவந்தோம். தற்போது உடல்நிலை காரணமாக இறந்துபோனார். அதனால் அவரது உடலை தர முடியாது நாங்களே அடக்கம் செய்துகொள்ளப் போகிறோம் என வனிதா கூறியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு வனிதா தகவல் தெரிவித்துள்ளார்.

 

தகவலறிந்த விக்கிரவாண்டி தாசில்தார் தமிழ்ச்செல்வி, காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பழனிநாதன் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்று வனிதா, ஸ்ரீராம் ஆகிய இருவருக்குமிடையே நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி மற்றும் காவல்துறையினர் ஆலோசனையின்படி உயிரிழந்த வரதராஜ் உடலை பனையபுரத்திலேயே அடக்கம் செய்வது எனவும் அவரது இறுதிச்சடங்கில் மகன் என்ற முறையில் ஸ்ரீராம் இறுதிச் சடங்குகள் செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட வரதராஜனின் மகன் ஸ்ரீராம், சமாதானமாகி இறுதிச் சடங்குகளை செய்து, அவரது உடலை அன்று இரவு 8 மணியளவில் பனையபுரத்தில் அடக்கம் செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Notice that Vikravandi constituency is vacant

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (06.04.2024) புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் (06.04.2024) விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். இதனையடுத்து புகழேந்தியின் உடல் நேற்று (07.04.2024) முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அதாவது போலீசார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு அரசு மரியாதை அளித்தனர். இதனையடுத்து சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில் புகழேந்தி உடல் தகனம் செய்யப்பட்டது. 

Notice that Vikravandi constituency is vacant

இந்நிலையில், புகழேந்தி காலமானதை அடுத்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப் பேரவை செயலகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே தேதியில் (19.04.2024) இடைத் தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.