Skip to main content

6 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்... அடையாற்றில் வீசப்பட்ட தலை... அதிரவைக்கும் திமுக நிர்வாகியின் கொலை!

Published on 14/05/2022 | Edited on 14/05/2022

 

 Body cut into 6 pieces ... Head thrown at Adyar ...  DMK executive incident

 

காணாமல் போன திமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டு 6 துண்டுகளாக வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்த கொலை தொடர்பாக பெண் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

திருவொற்றியூர் 7 வார்டு திமுக பிரதிநிதியான சக்கரபாணி காணாமல் போனதாக மணலி காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் கொடுத்திருந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் சக்கரபாணியின் மொபைல் எண்ணை கொண்டு விசாரணை செய்ததன் அடிப்படையில் ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியில் உள்ள வீட்டில் சோதனையில் போலீசார் ஈடுபட்டபொழுது கழிவறையில் தலையில்லாத உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும் உடல் பகுதி 6 துண்டுகளாக வெட்டப்பட்டு சாக்குப்பையில் மூட்டை கட்டப்பட்டு கிடந்தது.

 

 Body cut into 6 pieces ... Head thrown at Adyar ...  DMK executive incident

 

இதுதொடர்பாக அந்த வீட்டில் இருந்த தமின்மானு என்ற பெண்ணை போலீசார் பிடித்து விசாரித்ததில் அந்த பெண்ணிற்கும் சக்கரபாணிக்கும் முறையற்ற உறவு இருந்ததும், இதனை பெண்ணின் கணவரின் தம்பி வசீம் பாஷா கண்டித்ததும் இதனால் சக்கரபாணிக்கும் வசீம் பாஷாவுக்கும் மோதல் ஏற்பட்டதும் தெரியவந்தது. மோதலில் சக்கரபாணியை கொலை செய்து உடலை 6 துண்டுகளாக வெட்டி தலையை அடையாறு திருவிக பாலத்தில் இருந்து ஆற்றில் தூக்கி எறிந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

 

 Body cut into 6 pieces ... Head thrown at Adyar ...  DMK executive incident

 

6 துண்டுகளாக வெட்டப்பட்ட உடலையும் அதேபோல் ஆற்றில் வீச வைத்திருந்த நிலையில், கொலையாளிகள் போலீசார் வசம் சிக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் சக்கரபாணியுடன் முறையற்ற தொடர்பில் இருந்த தமின்மானு, வசீம் பாஷா ஆகிய இருவரையும் கைது செய்துள்ள போலீசார் டில்லி பாபு என்ற ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

 

 Body cut into 6 pieces ... Head thrown at Adyar ...  DMK executive incident

 

காணாமல் போன திமுக நிர்வாகி 6 துண்டுகளாக வெட்டப்பட்டு தலை ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் ராயபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.